ஆப்நகரம்

Custody: கஸ்டடி கதைலாம் பெருசா இல்ல, பாட்டி வடை சுட்ட கதை தான்: வெங்கட் பிரபு

Custody movie story: தான் இயக்கியிருக்கும் கஸ்டடி படத்தின் கதை பாட்டி வடை சுட்ட கதை தான் என கூலாக தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 7 May 2023, 10:31 am
Venkat Prabhu about custody: நாக சைதன்யாவை வைத்து தான் இயக்கிருக்கும் கஸ்டடி படம் சீரியஸாக இருக்காது என கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு.
Samayam Tamil venkat prabhu reveals naga chaitanya starrer custody story
Custody: கஸ்டடி கதைலாம் பெருசா இல்ல, பாட்டி வடை சுட்ட கதை தான்: வெங்கட் பிரபு


​கஸ்டடி​

தெலுங்கு நடிகரான நாக சைதன்யா வெங்கட் பிரபுவின் கஸ்டடி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். மே மாதம் 12ம் தேதி ரிலீஸாகும் கஸ்டடி படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்திருக்கிறார். படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் வெளியான டிரெய்லரை பார்த்தவர்கள் மிரண்டு போய்விட்டார்கள்.

ஐஸ்வர்யா தத்தா

​ஆக்ஷன்​

வெங்கட் பிரபு என்றாலே ஜாலியான கதையை படமாக்குவார் என ஒரு எண்ணம் உண்டு. இந்நிலையில் வெளியான கஸ்டடி டிரெய்லரை பார்த்தால் ஆக்ஷன் தூக்கலாகவும், மிரட்டலாகவும் இருக்கிறது. இது நம்ம வெங்கட் பிரபு படமா, காமெடியவே காணோமேப்பா என ரசிகர்களை வியக்க வைத்துவிட்டார். டிரெய்லர் தரமாக இருக்கிறது. கஸ்டடி படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள் ரசிகர்கள்.

​வெங்கட் பிரபு​

டிரெய்லரே இப்படி இருக்கிறதே படம் எப்படி இருக்கும் என்று பேசப்படுகிறது. கதை பயங்கரமாக இருக்கும் என்று நினைத்தால் பாட்டி வடை சுட்ட கதை தான் கஸ்டடி கதை என்கிறார் வெங்கட் பிரபு. அந்த வடையை எப்படி சுட்டார் என்பதை வித்தியாசமாக காட்டியிருக்கிறோம். இது வழக்கமான வெங்கட் பிரபுவின் ஜாலியான படம் இல்லை. வித்தியாசமான அனுபவமாக இருக்கும். என் படத்தில் இளையராஜாவின் பெயர் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசை இந்த படம் மூலம் நிறைவேறிவிட்டது என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

​நாக சைதன்யா​

Naga Chaitanya: எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்திருக்கீங்க: கணக்கில்ல பாஸுனு சொன்ன நாக சைதன்யா

கஸ்டடி படத்திற்கு இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள். அதனால் பாடல்களை பற்றி சொல்லவே வேண்டாம். இது நாக சைதன்யாவுக்கு தமிழில் நல்லதொரு லான்ச்சாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. கஸ்டடி மூலம் தெலுங்கு திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார் வெங்கட் பிரபு. அவரும் அங்கு லான்ச்சாகிவிடுவார் என்பது நன்றாக தெரிகிறது.



​உண்மை​

என் படத்தின் கதை வித்தியாசமானதாக இருக்கும். இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என சொல்லி பில்ட்அப் கொடுப்பார் வெங்கட் பிரபு என்று நினைத்தால் பொசுக்கென்று உண்மையை சொல்லிவிட்டார். அவர் அப்படி வெளிப்படையாக பேசியிருப்பது தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

​சென்னை​

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நாக சைதன்யா கூறியதாவது, என் வாழ்க்கையில் சென்னை மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. இந்த நகரத்தில் கஸ்டடி டிரெய்லரை வெளியிடுவதில் மகிழ்ச்சி. வெங்கட் பிரபு என்றால் யுவன் ஷங்கர் ராஜா இசை தான். ஆனால் கஸ்டடிக்கு இளையராஜாவும் இசையமைத்திருப்பது டபுள் சந்தோஷம். நானும், க்ரித்தியும் சேர்ந்து நடித்திருக்கும் இரண்டாவது படம் கஸ்டடி என்றார்.

​கைது​

முன்னதாக கஸ்டடி படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட்டை வீடியோவுடன் வெளியிட்டார்கள். அதில் வெங்கட் பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்து வைத்து அப்டேட் கேட்டார் நாக சைதன்யா. சிங்கிள் நாளை தான் வரும் என்று வெங்கட் பிரபு கூற அப்படியா, அப்போ நாளையே உங்களை ரிலீஸ் செய்கிறேன் என்று கூறி இடத்தை காலி செய்தார். அந்த வீடியோ வைரலானது.

Venkat Prabhu:வெங்கட் பிரபு கைது, சிறையில் அடைப்பு: ஏப்ரல் 10ல் ரிலீஸ்

எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்