ஆப்நகரம்

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பழம்பெரும் நடிகை ஜெயந்தி!

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி இன்று வீடு திரும்பியுள்ளார்.

Samayam Tamil 6 Apr 2018, 9:35 pm
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி இன்று வீடு திரும்பியுள்ளார்.
Samayam Tamil jayanthi


கர்நாடகா மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் 11.10.1945ம் ஆண்டு பிறந்தவர் நடிகை ஜெயந்தி கமலாகுமாரி. பின்னர், ஜெயந்தி என்ற பெயருடன் சினிமாவில் நுழைந்தார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரவுன் நேஷன் என்ற சீரியலும் நடித்துள்ளார். கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு ஜோடியாக 45 படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஜெயந்தி (பழையனூர் நீலி) மருத்துவமனையில் அனுமதி!
தமிழில் எம்.ஜி.ஆருடன் இணைந்து படகோட்டி, முகராசி ஆகிய படங்களிலும், சிவாஜி கணேசனுடன் இணைந்து கர்ணன், இருவர் உள்ளம் உள்ளிட்ட சில படங்களிலும், ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் ஆகிய ஹீரோக்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார். தனது முதல் கன்னட படமான ஜூனு கூடு என்ற படத்தை இயக்கிய பெக்கெட்டி சிவராமை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கிருஷ்ண குமார் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில், பெங்களூரில் வசித்து வரும் ஜெயந்திக்கு கடந்த மாதம் 26ம் தேதி நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா நேரில் சென்று நலம் விசாரித்தார். தொடர்ந்து உடல்நலம் தேறியதைத் அடுத்துஇன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்