1972ம் ஆண்டு வெளியான கனிமுத்துப்பாப்பா படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.பி. முத்துராமன். ரஜினிகாந்தை வைத்து 25 படங்களை இயக்கியவர் முத்துராமன். கோலிவுட்டின் வெற்றிகரமான இயக்குநரான அவருக்கு நேற்று 86வது பிறந்தநாளாகும். முத்துராமனுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்தநாள் அன்று அவர் சென்னையில் இருக்கும் மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் அவர்கள் கோவிட் 19 அறிகுறிகளுடன் மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கோவிட் நிமோனியா இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் தற்போது மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் இருக்கிறார். அவரின் நிலைமை தற்போது சீராக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முத்துராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர்.
86 வயதில் அவர் கொரோனாவை வென்று நல்லபடியாக வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள். முத்துராமன் மருத்துவமனையில் இருப்பதால் ரஜினி கவலையில் இருப்பாரே என்கிறார்கள் ரசிகர்கள்.
வயது மற்றும் உடல்நிலை காரணமாக ரஜினியால் மருத்துவமனைக்கு சென்று முத்துராமனை சந்திக்கவும் முடியாது. வீட்டில் இருந்தபடியே பிரார்த்தனை செய்வதை தவிர அவருக்கு வேறு வழியில்லை.
86 வயது என்றாலும் முத்துராமன் நல்ல ஆரோக்கியமாக இருந்தார். அதனால் அவரை கொரோனா ஒன்றும் செய்யாது என்று நம்பப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி போட்டு கண், காது, முகம் வீங்கிவிட்டது: பார்த்திபன்
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முத்துராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர்.
வயது மற்றும் உடல்நிலை காரணமாக ரஜினியால் மருத்துவமனைக்கு சென்று முத்துராமனை சந்திக்கவும் முடியாது. வீட்டில் இருந்தபடியே பிரார்த்தனை செய்வதை தவிர அவருக்கு வேறு வழியில்லை.
86 வயது என்றாலும் முத்துராமன் நல்ல ஆரோக்கியமாக இருந்தார். அதனால் அவரை கொரோனா ஒன்றும் செய்யாது என்று நம்பப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி போட்டு கண், காது, முகம் வீங்கிவிட்டது: பார்த்திபன்