ஆப்நகரம்

இலங்கையின் தேசிய கீதம் பாடிய பழம்பெரும் நடிகை காலமானார்!

இலங்கையின் தேசிய கீதத்தைப் பாடிய பழம்பெரும் நடிகை கே.ராணி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

Samayam Tamil 14 Jul 2018, 4:38 pm
இலங்கையின் தேசிய கீதத்தைப் பாடிய பழம்பெரும் நடிகை கே.ராணி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
Samayam Tamil sri lanka.


தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் கே.ராணி (75). கடந்த 1943ம் ஆண்டு பிறந்த இவர், 8 வயதிலேயே சங்கீதத்தில் சிறந்து விளங்கினார். தமிழில், மோகனசுந்தரம், சிங்காரி ஆகிய படங்களிலும், தெலுங்கில் ரூபவதி என்ற படத்திலும் பாடினார். இலங்கையின் தேசிய கீதத்தையும் பாடியுள்ளார். சங்கீதத்தின் மீதுள்ள இவரது ஆர்வத்தையும், திறமையையும் பார்த்து வியந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர், இவருக்கு இன்னிசை ரானி என்ற பட்டத்தை வழங்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் 500க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இதில், கல்யாணி, கல்யாணம் பண்ணிப்பார், தேவதாஸ் ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. திமுகவிற்கு பல பிரச்சார பாடல்களையும் பாடியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக, ஹைதராபாத்தில் உள்ள கல்யாண் நகரில் தனது மகள் விஜயாவுடன் வசித்து வந்த அவர் நேற்று இரவு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது உடலுக்கு தெலுங்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்