ஆப்நகரம்

ஜவுளிக்கடையை மையப்படுத்திய சங்கதலைவன் படத்தில் விஜே ரம்யா!

ஜவுளிக்கடையில் நடக்கும் அவலங்களை மையப்படுத்திய புதிய படத்தில் விஜே ரம்யா நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 18 Jan 2018, 6:01 pm
ஜவுளிக்கடையில் நடக்கும் அவலங்களை மையப்படுத்திய புதிய படத்தில் விஜே ரம்யா நடிக்கவுள்ளார்.
Samayam Tamil vetrimaarans next with vj ramya
ஜவுளிக்கடையை மையப்படுத்திய சங்கதலைவன் படத்தில் விஜே ரம்யா!


வசந்த பாலன் இயக்கத்தில் வந்த அங்காடித்தெரு படத்தைத் தொடர்ந்து ஜவுளிக்கடையில் நடக்கும் பிரச்சனையை மையப்படுத்தி புதிய படம் உருவாகவுள்ளது. இது தொடர்பாக சமீபத்தில், பாரதிநாதன் எழுதிய தறி என்ற புதிய நாவல் வெளியாகியிருந்தது. தற்போது, இந்த நாவல் படமாக உருவாகவுள்ளது. எழுத்தாளரின் கைவண்ணத்தில் வெளியான இந்த நாவல், ஜவுளித்துறையை சார்ந்து சமூகத்தில் நடக்கும் அவலநிலையை மையப்படுத்தி அமைந்துள்ளது.

இதனைக் கொண்டு சேலம், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளித்துறையை மையப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளது. இதனை இயக்குனர் மணிமாறன் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு சங்கதலைவன் என்று டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்தில் சமுத்திரக்கனி, கருணாஸ், விஜே ரம்யா ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இப்படத்தை வெற்றிமாறனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 22ம் தேதி தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thari, a Tamil novel written by Bharathinathan which was released recently, is going to become a film soon. The book, based on the author's experiences, revolved around many social issues surrounding the textile industries in Salem, Coimbatore and Erode. Directed by Manimaaran, the film, titled Sangathalaivan, will star Samuthirakani, Karunas as well as Vijay TV VJ Ramya. The film is produced by Vetrimaaran owned Grass Root Film Company, and will go on floors from January 22.

அடுத்த செய்தி

டிரெண்டிங்