ஆப்நகரம்

Viduthalai: 'விடுதலை' படப்பிடிப்பு தளத்தில் விபரீதம்: பேரதிர்ச்சியில் வெற்றிமாறன்.!

வெற்றிமாறனின் 'விடுதலை' படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 3 Dec 2022, 7:26 pm
வெற்றிமாறன் தற்போது சூரி நடிப்பில் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் 'விடுதலை' படப்பிடிப்பு தளத்தில் விபத்தி ஏற்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
Samayam Tamil விடுதலை
விடுதலை


'அசுரன்' படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது நடிகர் சூரியை ஹீரோவாக்கி 'விடுதலை' என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நடிகர் சூரி சிக்ஸ்பேக் வைத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ‘விசாரணை’ படம் போலவே இந்த படத்தையும் வித்தியாசமாக இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப்படம் தயாராகி வருகிறது. எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

Thalapathy 67: 'தளபதி 67' குறித்து விஜய் சேதுபதி சொன்ன விஷயம்: என்ன இப்படி சொல்லிட்டாரே.!

'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின்போது சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வந்த சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் கயிறு அறுந்து விழுந்ததில் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vijay Sethupathi: சிவகார்த்திகேயன் பற்றி 'அப்படி' ஒரு விஷயத்தை சொன்ன விஜய் சேதுபதி.!

'விடுதலை' படத்தினை இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்தப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கவுள்ள இந்தப்படத்தின் டெஸ்ட் ஷுட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்