ஆப்நகரம்

கணவரின் அசிங்கமான நடவடிக்கையை வெளிச்சம் போட்டு காட்டிய நடிகை!

இளம் நடிகை பிரியங்கா, தன் மானத்திற்கு பங்கம் விளைவித்த தன் கணவர் லாரன்ஸ் ராமின் அசிங்கமான செயலை திரை உலகிற்கு வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளார்.

Samayam Tamil 7 Jan 2019, 1:37 pm
பரத் நடிப்பில் வெளியான ‘வெயில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா. இந்தப் படத்தில் நடிகர் பசுபதிக்கு காதலியாக நடித்திருப்பார். இதையடுத்து பிரியங்கா நாயர், தமிழில் ‘தொலைபேசி’, ‘செங்காத்து பூமியிலே’ என ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
Samayam Tamil priyanka-nair


இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குனர் லாரன்ஸ் ராம் என்பவரை கடந்த 2012 ல் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் இருவரும் சென்னையில் வாழ்ந்து வந்தனர். பின்னர் பிரியங்கா கர்ப்பம் அடைந்தார். பிரசவத்திற்காக திருவனந்தபுரத்தில் இருக்கும் தன் அம்மா வீட்டிற்கு சென்றார். அதன் பின் அவர் சென்னைக்கு திரும்பவே இல்லையாம். பிரியங்காவுக்கு 2013ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு முகுந்த் ராம் என பெயர் வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை பிரியங்கா, கடந்த 2015ல் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கணவருக்கு எதிராக 4 வழக்குகளை பதிவு செய்திருந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் பிரியங்கா. ஏன் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்தேன் என்பதை கூறியுள்ளார்.

‘‘தன் கணவர் லாரன்ஸ் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் பரப்பியுள்ளார். மேலும் சினிமாவில் நடிக்கக்கூடாது என்று மிரட்டினார். அதனால் தான் அவரை விட்டு பிரிய முடிவெடுத்தேன்’’ என்றார் பிரியங்கா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்