ஆர் கே நகர் தேர்தல் முடிவுகள் விலைக்கு வாங்கப்பட்டதாகவும், அதற்கு மக்கள் துணைபோனது வருத்தம் அளிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 21 தேதி ஆர் கே நகர் இடைத்தேர்தேர்தல் நடைபெற்றது. இதில் டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். டிடிவி தினகரன் மக்களுக்கு அதிக பணம் கொடுத்துதான் வென்றுள்ளார் என்று பல அரசியல் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் வார இதழுக்கு கட்டுரைகள் எழுதிவரும் கமல் , தனது கட்டுரையில் டிடிவி தினகரனை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது ’ ஆர். கே.நகர் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டுள்ளது . ஊரறிய நடைபெற்ற குற்றத்திற்கு மக்களும் உடைந்தையாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. ஆர். கே.நகர் இடைத்தேர்தலின் வெற்றி ஜனநாயகத்தின் வீழ்ச்சி என்று கமல் விமர்சித்துள்ளார்.