சென்னை: பிரபாகரனின் வரலாறு திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் ஈழம் வேண்டிப் போராடியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, அதன் தலைவராக இருந்தவர்.
பல ஆண்டுகால தமிழ் ஈழப் போராட்டம், கடந்த 2009ல் முடிவுக்கு வந்தது. அப்போது நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தார் இலங்கை அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் பிரபாகரனின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க இயக்குநர் ஜி.வெங்கடேஷ் குமார் முன்வந்துள்ளார். இவர் நீலம், உனக்குள் நான், லைட் மேன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இப்படத்தை தனது ’ஸ்டூடியோ 18’ நிறுவனத்தின் மூலம் வெங்கடேஷ் குமாரே தயாரிக்கிறார். நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Viduthalai Pulikal Prabhakaran life history will be made as movie soon.
இலங்கையில் தமிழ் ஈழம் வேண்டிப் போராடியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, அதன் தலைவராக இருந்தவர்.
பல ஆண்டுகால தமிழ் ஈழப் போராட்டம், கடந்த 2009ல் முடிவுக்கு வந்தது. அப்போது நடந்த இறுதிக்கட்ட போரில் பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தார் இலங்கை அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் பிரபாகரனின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க இயக்குநர் ஜி.வெங்கடேஷ் குமார் முன்வந்துள்ளார். இவர் நீலம், உனக்குள் நான், லைட் மேன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இப்படத்தை தனது ’ஸ்டூடியோ 18’ நிறுவனத்தின் மூலம் வெங்கடேஷ் குமாரே தயாரிக்கிறார். நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Viduthalai Pulikal Prabhakaran life history will be made as movie soon.