கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் ‘விஸ்வாசம்’ என்ற வெற்றிப் படத்தை அடுத்து தற்போது ‘நேர் கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ‘தீரன்’ பட இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வித்யா பாலன் வெறும் 2 நாள் தான் கால்ஷீட் கொடுத்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் வித்யா பாலனின் காட்சியில் வெறும் 10 நிமிடம் தான் இடம் பெற உள்ளதாம். அதிலும் 4 நிமிடத்திற்கு ஒரு பாடல் மீதி 6 நிமிடம் தான் அவருக்கு படத்தில் வசனம் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வித்யா பாலன் வெறும் 2 நாள் தான் கால்ஷீட் கொடுத்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் வித்யா பாலனின் காட்சியில் வெறும் 10 நிமிடம் தான் இடம் பெற உள்ளதாம். அதிலும் 4 நிமிடத்திற்கு ஒரு பாடல் மீதி 6 நிமிடம் தான் அவருக்கு படத்தில் வசனம் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.