ஆப்நகரம்

கோவாவில் நயன்தாரா அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய விக்கி

கோவாவில் தன் வருங்கால மாமியாரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 15 Sep 2020, 11:32 am
கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டதில் இருந்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வெளியே எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தார்கள். இந்நிலையில் தான் ஓணம் பண்டிகையை கொண்டாட தனி விமானம் மூலம் கொச்சிக்கு சென்றார்கள்.
Samayam Tamil nayanthara


அதன் பிறகு ரிலாக்ஸ் செய்ய கோவாவுக்கு சென்றிருக்கிறார்கள். கோவாவில் நீச்சல் குளம் அருகே நயன்தாரா நடந்து சென்றபோது எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். புகைப்படத்தை பார்த்தவர்கள் நயன்தாராவின் முகம் சரியாகத் தெரியவில்லை, வேறு ஏதாவது புகைப்படத்தை போஸ்ட் செய்யுங்கள் என்றார்கள்.

நயன்தாராவுடன் கோவாவில் விக்கி: வில்லங்கமா ஐடியா கொடுக்கும் ரசிகாஸ்

அதன் பிறகு நயன்தாரா வெள்ளை நிற உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram 🧿🧿🧿Happy birthday to my dearest ammmuuu Mrs. Kurian 😌🥳🥳🥳🧿🧿💓💓💓💓☺️☺️☺️ A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on Sep 14, 2020 at 10:33am PDT
அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

வருங்கால மாமியாரை விக்னேஷ் சிவன் இன்னொரு அம்மாவாக பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. இரண்டு குடும்பங்களும் இப்படி ஒற்றுமையாக இருப்பது நல்ல விஷயம். விக்னேஷ் சிவன் போன்ற காதலர் கிடைக்க நயன்தாரா கொடுத்து வைத்திருக்கிறார்.

இந்த காதல், காதலாகவே இருந்துவிடாமல் விரைவில் திருமணத்தில் முடிந்தால் நாங்கள் எல்லோரும் சந்தோஷப்படுவோம். நயன்தாரா அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடத் தான் கோவாவுக்கு சென்றீர்களா?.இரண்டு குடும்பத்தாரும் ஒன்றாக இருக்கும் இந்த நேரத்தில் திருமணம் செய்து கொள்ளலாமே என்று தெரிவித்துள்ளனர்.

தான் எந்த புகைப்படத்தை வெளியிட்டாலும் திருமணம் எப்பொழுது என்று ரசிகர்கள் கேட்பது விக்னேஷ் சிவனுக்கு தெரியாமல் இல்லை. காதல் போர் அடிக்கும் போது திருமணம் செய்து கொள்வோம் என்று விக்னேஷ் சிவன் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். அவரின் பதில் நயன்தாராவின் ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்தது.

லாக்டவுனுக்கு முன்பு நயன்தாரா சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். அந்த படத்தில் நயன்தாரா தான் ரஜினியின் மனைவி என்று சொல்லப்படுகிறது. அப்படி என்றால் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவா என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்டேட் கொடுப்பதில் ஆர்வம் இல்லாத சிவா இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் படத்திலும் நடித்து வந்தார் நயன்தாரா. அந்த படத்தின் 60 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மனாக நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. மூக்குத்தி அம்மன் படம் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இது தவிர்த்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கவிருக்கிறார் நயன்தாரா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்