ஆப்நகரம்

டுவிட்டரில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்!

சொன்னபடி பாடலை வெளியிட முடியவில்லை என்று கூறி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

TNN 29 Jul 2017, 3:55 pm
சொன்னபடி பாடலை வெளியிட முடியவில்லை என்று கூறி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
Samayam Tamil vignesh sivan ask apologies to fans
டுவிட்டரில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்!


நடிகர் சூர்யாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்‘. இந்தப் படத்தின் ‘நானா தானா வீண போனா’ என்ற பாடல் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த பாடலின் வரிகள் அடங்கிய யூடியூப் வீடியோவை இன்னும் சற்று நேரத்தில் வெளியிடுவதாக தனது டுவிட்டரில் அறிவித்திருந்தார். ஆனால் சற்று முன் அவர் தனது டுவிட்டரில், ‘மன்னித்து கொள்ளுங்கள். டெக்னிக்கல் பிரச்னை காரணமாக யூடியூப் பாடல் வரிகள் வெளியிட முடியவில்லை. நாளை கண்டிப்பாக வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் சிறிது மன வருத்தத்தில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் அனிருத் இசையமைத்த ‘நானா தானா வீண போனா’ என்ற பாடலுக்கு எல்லா தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்து குவிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்