ஆப்நகரம்

அனல் பறக்கும் வெயிலில் ராஜஸ்தானில் விஜய் படப்பிடிப்பு!

ராஜஸ்தானில் அனல் பறக்கும் வெயிலுக்கு நடுவே விஜய் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

TNN 6 Apr 2017, 3:25 pm
ராஜஸ்தானில் அனல் பறக்கும் வெயிலுக்கு நடுவே விஜய் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
Samayam Tamil vijay 61 shooting held in rajasthan
அனல் பறக்கும் வெயிலில் ராஜஸ்தானில் விஜய் படப்பிடிப்பு!


நடிகர் விஜய்யை வைத்து இயக்குனர் அட்லி ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். ‘தெறி’ படத்தை ஹிட் கொடுத்ததால் அட்லிக்கு மீண்டும் இயக்கும் வாய்ப்பு கொடுத்தார் விஜய். தயாரிப்பாளரிடம் தன்னை விஜய் சிபாரிசு செய்ததால் தன்னுடைய சம்பளத்தை பல கோடியாக உயர்த்திக்கொண்டார் அட்லி. இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.

விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படும் இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் வடிவேலு, சத்யராஜ், கோவை சரளா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல் காட்சியின் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ராஜஸ்தான் சென்றுள்ளனர். ராஜஸ்தானின் ஜெய் சல்மாரிலுள்ள பிரம்மாண்ட அரண்மனை இப்பாடலுக்கான காட்சியை படமாக்குவதற்காக தற்போது அட்லி, விஜய், நித்யா மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் ராஜஸ்தானில் முகாமிட்டுள்ளனர்.

இப்போது அங்கே கடுமையான கோடைகாலம். அதைப் பற்றி யோசிக்காமல் ராஜஸ்தானுக்கு சென்றுவிட்ட யூனிட் அங்கே தகிக்கும் வெயிலைக்கண்டு கலங்கிப்போய்விட்டதாம். ஆனாலும் பாடல் காட்சியை ராஜஸ்தான் பின்னணியில் எடுத்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தோடு படப்பிடிப்பு நடத்தி வருகிறாராம் அட்லி. அவருடைய பிடிவாதம் விஜய்யை சற்றே அப்ஸெட்டாக்கி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்