ஆப்நகரம்

நம் தமிழர்களுக்கு வேலை கொடுங்கள் - சென்னையில் படப்பிடிப்பு நடத்த சொன்ன விஜய்!

நடிகர் விஜய், தமிழக தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்துக் கொண்டு ஏ.ஆர்.முருகதாஸிடம் படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த சொல்லியுள்ளார்.

Samayam Tamil 6 Apr 2018, 4:40 pm
நடிகர் விஜய், தமிழக தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்துக் கொண்டு ஏ.ஆர்.முருகதாஸிடம் படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த சொல்லியுள்ளார்.
Samayam Tamil vijay


நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தற்போது தமிழ் சினிமாவில் ஸ்டிரைக் நடைபெற்று வருகிறது. இதனால் நடைபெற்று வந்த எல்லா படப்பிடிப்புகளும் அப்படி அப்படியே நின்று போயுள்ளன.

இந்த நேரத்தில் இப்படத்தை கதை என்ன என்ற விவரம் வெளியாகியுள்ளது. இப்படம் அரசியல் சார்ந்த ஒரு கதையாம், ஒரு கட்சியின் தலைவராக கரு. பழனியப்பன் நடித்துள்ளார். ராதாரவி எம்.எல்.ஏ. வாக நடித்துள்ளாராம்.

ரசிகர்களின் அன்புத் தொல்லையை தவிர்ப்பதற்காக படத்தின் காட்சிகளை தமிழகத்தைத் அடுத்து வேறு மாநிலத்தில் எடுக்க படக்குழு முடிவு செய்தார்களாம். ஆனால் விஜய் இங்குள்ள தொழிலாளர்களை மனதில் வைத்து சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த கூறியிருக்கிறாராம் நடிகர் விஜய்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்