ஆப்நகரம்

விஜய்யை வைத்து அடுத்த படம் இயக்க பயமாக உள்ளது: அட்லி ஓபன் டாக்!!

நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் அட்லி, நடிகர் விஜய்யுடன் அடுத்த படம் இயக்குவது பயமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Aug 2018, 9:33 pm
நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் அட்லி, நடிகர் விஜய்யுடன் அடுத்த படம் இயக்குவது பயமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil விஜய்யை வைத்து அடுத்த படம் இயக்க பயமாக உள்ளது: அட்லி ஓபன் டாக்!!
விஜய்யை வைத்து அடுத்த படம் இயக்க பயமாக உள்ளது: அட்லி ஓபன் டாக்!!


ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இந்தப் படத்தின் வெற்றியின் மூலம், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். இதையடுத்து, விஜய்யுடன் இணைந்து தெறி மற்றும் மெர்சல் என்ற இரண்டு மிகப்பெரிய வெற்றிப் படங்களை வழங்கினார்.

இந்நிலையில், நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார். கடைசி கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் மீண்டும் அட்லி இயக்கத்தில் மூன்றாவதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

இதனிடையே, விஜய்யை மீண்டும் இயக்குவது பற்றி பேசிய இயக்குநர் அட்லி, “நான் பொதுவாக பயப்பட மாட்டேன். ஆனால், இம்முறை தன்னம்பிக்கையும், பொறுப்பும் அதிகமாகி உள்ளது. திரும்பவும், இந்த தடவை என்ன செய்யப் போகிறேன் என்ற பிரச்சனை வந்துள்ளது. சில தினங்கள் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து வந்தேன். ஆனால், இப்போது ஒரு ஐடியா கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்