ஆப்நகரம்

Vijay மாஸ்டர் ட்ரெய்லர் வரும் வரை இது போதுமே.. தளபதி விஜய் செடி நடும் புகைப்படங்கள் வைரல்

தளபதி விஜய் மகேஷ் பாபுவின் அழைப்பை ஏற்று கிறீன் இந்தியா சேலஞ்சில் பங்கேற்று இருக்கிறார். அதன் புகைப்படங்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.

Samayam Tamil 11 Aug 2020, 8:17 pm
சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தன்னுடைய பிறந்த நாளில் வீட்டில் செடி நட்டு அதனை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார். அவர் கிரீன் இந்தியா சேலஞ்சில் பங்கேற்றது போல ஜூனியர் என்டிஆர், தளபதி விஜய் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் பங்கேற்க வேண்டும் என நாமினேட் செய்திருந்தார். விஜய் சமூக வலைத்தளங்களில் அவ்வளவாக ஆக்டிவாக இல்லை என்பதால் அவர் மகேஷ் பாபு அழைப்பை ஏற்றுக் கொள்வாரா என்கிற கேள்வியும் அனைவரது மனதிலும் எழுந்தது.
Samayam Tamil Vijay


இந்நிலையில் சற்று முன் தளபதி விஜய் தனது வீட்டில் மரம் நட்ட புகைப்படங்கள் சிலவற்றை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அவை தான் தற்போது இணையத்தில் மிகப் பெரிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் மற்றும் ரீ ட்வீட்கள் அதிகம் வந்துகொண்டு இருக்கின்றன.

இது பற்றி விஜய் ட்வீட்டில் குறிப்பிட்டிருப்பதாவது.. "இது உங்களுக்காக மகேஷ் பாபு காரு. பசுமையான இந்தியா மற்றும் நல்ல உடல் நலத்திற்காகவும் தான். நன்றி. பாதுகாப்புடன் இருங்கள்" என ட்வீட் செய்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்து மகிழ்ச்சியான மகேஷ் பாபு "Thanks a lot brother for taking this up. Stay safe! " எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


அது மிகப் பெரிய அளவில் வைரலாகி வரும் நிலையில் பிரபலங்களும் பலரும் விஜய்க்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "வாவ் விஜய்னா.. சூப்பர் ஃபிட்டாக இருக்கிறீர்கள். மாஸ்டர் டிரைலர் வர்ற வரைக்கும் இது போதுமே" என கூறியிருக்கிறார்.


பிகில் பட நடிகை அமிர்தா ஐயர் பதிவிட்டுள்ள ட்விட்டில், "இது மிகவும் க்யூட்டாக இருக்கிறது விஜய் சார். நீங்கள் மகேஷ் பாபுவுக்காகவும் சுற்றுப்புறத்திற்காகவும் இதை செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.


மேலும் பல்வேறு பிரபலங்களும் விஜய் கிரீன் இந்தியா சேலஞ்சில் பங்கேற்று இருப்பதற்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்களும் கூட பலரும் விஜய்யை நீண்ட நாட்கள் கழித்து பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் முடித்து விட்ட தளபதி விஜய் அதன் ரிலீசுக்காக தான் காத்திருக்கிறார். அந்த படம் ஏப்ரில் 9ம் தேதி வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தியேட்டர்கள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பதைப் பொறுத்து தான் அதன் ரிலீஸ் இருக்கும் என தயாரிப்பாளர் கூறியிருக்கிறார். அது நிச்சயம் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும் என்று உறுதியளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அடுத்து விஜய் தளபதி 65 படத்திற்காக சன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி சேர உள்ளார். இதனை ஏ. ஆர். முருகதாஸ் இயக்க உள்ளார் என கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் அவர் விஜய்யை நேரில் சந்தித்து முழு கதையையும் கூறி உள்ளார் என்றும் செய்தி வந்தது குறிப்பிடத்தக்கது. தளபதி 65 அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்