ஆப்நகரம்

விஜய் என்னை 'மேடம்'னு தான் கூப்பிடுவார்: மாஸ்டர் ஷூட்டிங்கில் நடந்ததை கூறிய பிரபல நடிகை

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் மற்றவர்களை எப்படி நடத்துவார் என்பது பற்றி பிரபல டிவி தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன் பேசியுள்ளார்.

Samayam Tamil 9 Mar 2020, 9:21 am
மாஸ்டர் படம் தான் தற்போதைக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு படம். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், கைதி அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, VJ ரம்யா, தீனா என பலர் நடித்துள்ளனர்.
Samayam Tamil Master Vijay


மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் சென்ற வாரம் முடிவடைந்தது. படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என கூறப்படுகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் நடைபெற்றது. அந்த ஷூட்டிங்கில் VJ ரம்யாவும் பங்கேற்றார்.

அப்போது நடந்த சில விஷயங்கள் பற்றி அவர் ஒரு பேட்டியில்பேசியுள்ளார். "நான் ஷூட்டிங்கில் பங்கேற்ற இரண்டாவது நாள் தான் விஜய்யுடன் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அந்த அறையில் 20க்கும் அதிகமான நபர்கள் இருந்தார்கள். விஜய் சார் உள்ளே வந்ததும் அனைவரையும் பார்த்து ஹலோ சொல்லிவிட்டு தான் என்ன காட்சி என்று கேட்பார். என்னை பார்த்ததும் அவர் ஒரு hug கொடுத்தார், அதன் பிறகு welcome Ma'am என கூறினார்."

அதன்பிறகு ஒரு காட்சியில் நடித்து முடித்தபிறகு, "எப்படி Ma'am இப்படி ஒரு குரல் வெச்சிருக்கீங்க" என விஜய் வந்து ரம்யாவிடம் பாராட்டி பேசினாராம்.

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியையும் VJ ரம்யா தான் தொகுத்து வழங்க வாய்ப்பு இருக்கிறது என ஒரு உறுதிபடுத்தப் படாத செய்தி பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்