ஆப்நகரம்

நெய்வேலி பரபரப்புக்கு நடுவில் விஜய் செய்த விஷயம்! வைரல் புகைப்படம்

மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் செய்துள்ள விஷயத்திற்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 6 Mar 2020, 10:19 am
விஜய் சமீபத்தில் தான் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்தார். படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் என்பதால் படக்குழு இறுதி கட்ட பணிகளில் வேகமாக ஈடுபட்டு வருகிறது. பிகில் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் படம் இது என்பதாலும், கைதி படமும் ஹிட் என்பதாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
Samayam Tamil Master Vijay


மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் டெல்லி, சென்னை, நெய்வேலி, ஷிமோகா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. நெய்வேலியில் ஷூட்டிங் நடந்தபோது தான் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு விஜய்யை அழைத்து சென்று வருமான வரித்துறையினர் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அதன்பிறகு மாஸ்டர் ஷூட்டிங் நடத்த நெய்வேலி சுரங்கம் முன்பு அதிக அளவில் கூட்டம் கூடியது. அவர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படமும் வெளியாகி மிகவும் வைரலானது.

இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் நடந்த நெய்வேலியில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் செய்துள்ள ஒரு விஷயம் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

ஷூட்டிங் நடந்த இடத்தில் நியாபக அர்த்தமாக அவர்கள் செடி நட்டு வைத்துள்ளனர். அதன் புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களால் அதிகம் பகிர்த்து வருகின்றனர்.



இந்த இடத்தில் ஷூட்டிங் நடந்தபோது தான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அந்த இடமே சில நாட்கள் பரபரப்பாக தான் இருந்தது.

மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் கைதி புகழ் அர்ஜுன் தாஸ்.நடிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்