ஆப்நகரம்

கொரோனா வைரஸ் தானாக பரவவில்லை: மக்களை எச்சரித்த நடிகர் விஜய் ஆன்டனி

கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தடையை மீறி வெளியில் செல்லும் நபர்களை பற்றி கோபமாக ட்விட் செய்துள்ளார் விஜய் ஆன்டனி.

Samayam Tamil 3 Apr 2020, 2:40 pm
கொரோனா வைரஸ் பரவுவததை தடுக்க அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை சரியாக பின்பற்றாமல் வெளியில் அதிகம் பேர்சுற்றிக்கொண்டிருக்கின்றனர்.
Samayam Tamil Vijay Antony tweets about Corona


இது தொடர்ந்தால் அரசு 144 தடையை மிக தீவிரமாக செயல்படுத்தும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார்.

மக்கள் கொரோனாவின் தீவிரத்தை உணராமல் இப்படி செய்து வருவது பற்றி நடிகர் விஜய் ஆன்டனி ட்விட்டரில் கோபத்துடன் பதிவிட்டுள்ளார். கொரோனா தானாக பரவவில்லை, வெளியில் செல்லும் பொது மக்கள் தான் பரப்புகிறார்கள் என கோபத்துடன் அவர் பேசியுள்ளார்.

"Dear friends கொரோனா வைரஸ் தானாக பரவவில்லை, பொது மக்கள் தான் பரப்புகிறார்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உதவுங்கள்" என அவர் ட்விட் செய்துள்ளார்.


இசையமைப்பாளராக இருந்து நடிகராக அறிமுகம் ஆனவர் விஜய் ஆன்டனி. சென்ற வாரம் அவர் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் மக்களை சமூக விலகலை கடைபிடிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.

"இந்த சமயத்தில் நாம் செய்யவேண்டியது எல்லாமே ஒன்று தான். அமைதி யாக வீட்டிலேயே இருந்து, நம்மால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராமல், அல்லது மத்தவங்க பிரச்சனை நமக்கு வராம, அமைதியா வீட்டில் குடும்பத்துடன் நேரம் செலவு செய்வது மட்டும் தான்" என விஜய் ஆன்டனி கூறியிருந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்