ஆப்நகரம்

எல்லாம் முடிஞ்சதுன்னு நினைத்தேன்: விபத்து குறித்து உருக்கமாக பேசிய பாத்திமா விஜய் ஆண்டனி.!

'பிச்சைக்காரன் 2' பட நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனிக்கு ஏற்பட்ட விபத்து குறித்து உருக்கமாக பேசியுள்ளார் அவரின் மனைவி பாத்திமா.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 17 May 2023, 8:04 am
விஜய் ஆண்டனி நடித்து இயக்கியுள்ள 'பிச்சைக்காரன் 2' படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இதன் முதல் பாகத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மொழியில் ரிலீசாகவுள்ள 'பிச்சைக்காரன் 2' படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
Samayam Tamil விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி


தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்து வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது நடிகராகவும் கலக்கி வரும் இவர் தயாரிப்பாளராகவும் பல படங்களை வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து தற்போது 'பிச்சைக்காரன் 2' படம் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பிச்சைக்காரன் முதல் பாகம் வெளியாகி ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. மேலும் மலேசியா படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனி கடுமையான விபத்தில் சிக்கினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை கிளப்பியது. அதன்பிறகு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார்.

இந்நிலையில் 'பிச்சைக்காரன் 2' படம் ரிலீசுக்கு தயாராகி தற்போது புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற இந்தப்படத்தின் நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா, பொதுவாக எங்களுடைய பட விழாக்களில் நான் பேசுவதில்லை. இப்போது நான் மேடையேறி சிரித்து கொண்டிருப்பதற்கான காரணமான இறைவனுக்கு கோடி நன்றி. எங்களுக்காக பல கோடி நல்ல உள்ளங்கள் இருக்கிறீர்கள். அனைவருக்கும் நன்றிகள்.

Aishwarya Rajesh: ராஷ்மிகாவை விட சிறப்பாக பொருந்தி இருப்பேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்.!

மாட்டு பொங்கல் தினத்தின் போது விஜய் ஆண்டனியின் விபத்து குறித்து எனக்கு போன் வந்தது. சுயநினைவு இல்லாமல் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார் என சொன்னார்கள். அதோடு எல்லாம் முடிந்துவிட்டது என்றுதான் நினைத்தேன். என்னை பத்திரிகையாளர்கள் உட்பட அனைவரும் தேற்றி பாசிட்டிவாக பேசினார்கள். அதன் பிறகு நடந்த அத்தனையும் உங்களுக்கு தெரியும்.

இப்போது அவர் நன் அனைவரின் முன்னும் அமர்ந்திருக்க கடவும் மற்றும் உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும் தான் காரணம். அவரை திருமணம் செய்து அவருக்கு சப்போர்ட்டாக இருப்பதில் மகிழ்ச்சி என உருக்கமாக பேசியுள்ளார் பாத்திமா விஜய் ஆண்டனி. 'பிச்சைக்காரன் 2' படம் மே 19 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay: விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி இணைந்தது எப்படி.?: பிரபலம் பகிர்ந்த தகவல்.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்