ஆப்நகரம்

நான்கவதாக அட்லீயுடன் இணைய மறுத்த விஜய்? காரணம் என்ன?

‘மெர்சல்’ படத்தை அடுத்து, இயக்குனர்அட்லி, விஜய்யிடம் கதை சொல்லப் போயி, கதையை கேட்க விருப்பமில்லாமல் அவரை திருப்பி அனுப்பியுள்ளார் நடிகர் விஜய்.

Samayam Tamil 4 Apr 2018, 5:03 pm
‘மெர்சல்’ படத்தை அடுத்து, இயக்குனர்அட்லி, விஜய்யிடம் கதை சொல்லப் போயி, கதையை கேட்க விருப்பமில்லாமல் அவரை திருப்பி அனுப்பியுள்ளார் நடிகர் விஜய்.
Samayam Tamil vijay-atlee


நடிகர் விஜய்யை வைத்து இரண்டு பிரம்மாண்ட படங்களை இயக்கியுள்ளார் அட்லி. ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய மாஸ் ஹிட்டானது. ‘மெர்சல்’ படத்தை அடுத்து அட்லி அடுத்து யாரை வைத்து இயக்குவார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். இந்நிலையில் அவர் அடுத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ‘மெர்சல்’ படத்தை இயக்கியபோது அட்லியால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 20 கோடி நஷ்டம் என கூறப்படும் நிலையில், சமீபத்தில் இங்கிலாந்தின் தேசிய விருது கிடைத்தது. அதை ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிலையில் இயக்குனர் அட்லி ஒரு புதிய கதையுடன் விஜய்யை சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால் விஜய் கதையை கூட கேட்காமல், ‘பிறகு பார்க்கலாம்‘ என கூறி திருப்பி அனுப்பி வைத்துவிட்டாராம். அதனால் கடும் சோகத்தில் இருந்த அட்லி, அடுத்த படத்தை தெலுங்கில் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்