ஆப்நகரம்

Vijay Deverakonda: தமிழ் ராக்கர்ஸிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்ட நடிகர் விஜய்

ரசிகர்களிடமும், தமிழ் ராக்கர்ஸிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Nov 2018, 5:04 pm
அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அதோடு நோட்டா படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இந்நிலையில் இவரின் ‘டாக்ஸி வாலா’ தெலுங்கு படம் கடந்த 16ம் தேதி ரிலீஸ் ஆனது.
Samayam Tamil taxiwaala


முதலில் ரிலீஸ் செய்த தமிழ்ராக்கர்ஸ் :
டாக்ஸிவாலா படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அந்த படத்தை தமிழ் ராக்கர்ஸ் ரிலீஸ் செய்தது. இதனால் படக்குழுவினரும், திரை உலகத்தினரும் கடும் கலக்கத்தில் ஆழ்ந்தனர்.

அதோடு தமிழ் ராக்கர்ஸில் ரிலீஸ் ஆனதை வைத்து வந்த எதிர்மறை விமர்சனங்களால் துவண்டு போய் இருந்த விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா, பிரபாஸ் போன்ற முன்னனி நடிகர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.

அதோடு திரையரங்கில் அவரது ரசிகர்கள் வந்து ஆதரவு தெரிவித்து ஒருவழியாக டாக்ஸிவாலா வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

விஜய் தேவரகொண்டா மன்னிப்பு :
டாக்ஸிவாலா படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஜய் தேவரகொண்டா, “டாக்ஸிவாலா ரிலீஸ் ஆவதற்கு முன்னரே தமிழ் ராக்கர்ஸில் வெளியானதாலும், அதற்கு எதிர்மறை விமர்சனங்கள் பரவியதால், என் சினிமா வாழ்க்கை அவ்வளவு தான் என சோர்ந்திருந்தேன். பல முறை ரசிகர்களை திட்டியுள்ளேன். ஆனாலும் ரசிகர்கள் படத்தை வெற்றி பெற வைத்து எனக்கு வாழ்வு தந்துள்ளனர்.

அதே போல் படத்தை வெளியிட்ட தமிழ்ராக்கர்ஸ், ரூலர்ஸ், டாட் இன், டாட் காம் போன்ற நிறுவனங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அதே சமயம் டாக்ஸிவாலா படக்குழுவினர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்