ஆப்நகரம்

Vijay Deverakonda: பிரபலம் என்பதால் சங்கடம்: வேதனையில் விஜய்..!

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 'லைகர்' படம் வெளியானது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 2 Dec 2022, 5:53 pm
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'லைகர்' படத்தை நடிகை சார்மி மற்றும் பாலிவுட் பிரபலம் கரண் ஜோகர் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்தார். மேலும் ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
Samayam Tamil விஜய் தேவரகொண்டா
விஜய் தேவ்ரகொண்டா


பான் இந்தியா படமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் உலகமெங்கும் 'லைகர்' படம் வெளியானது. இந்தப்படம் வெளியானதில் இருந்து நெகட்டிவ் விமர்சனங்களே குவிந்தது. முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களோ தியேட்டரில் உட்காரவே முடியவில்லை என கலாய்த்து தள்ளினர். வசூல் மற்றும் விமர்சனரீதியாக பல சறுக்கல்களை சந்தித்தது 'லைகர்' படம்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

'லைகர்' படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால் நடிகை சார்மியிடமும் பூரி ஜெகன்நாத்திடமும் நஷ்ட ஈடு கேட்க, அவர்களைச் சந்திக்க மறுத்த சார்மி, தனக்கும் கடுமையான பண இழப்பு என்றும், நஷ்ட ஈடு தர வாய்ப்பில்லை என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனிடையில் 'லைகர்' படத்தை தயாரிக்க சந்தேகத்திற்குரிய வழிகளில் தயாரிப்பாளருக்கு பணம் கிடைத்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் பக்கா ஜட்சன் என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், லைகர் படத்தின் தயாரிப்புக்காக தங்களிடம் இருந்த கறுப்புப் பணத்தை அரசியல்வாதிகள் சிலர் முதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்திற்காக ஹவாலா பணத்தை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

Rajkiran: தயவுசெஞ்சு என்னை வாழ விடுங்க: ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பரபரப்பு புகார்.!

இது தொடர்பாக இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி ஆகியோரிடம் அமலாக்கத்துறை 12 மணிநேரம் விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் தேவரகொண்டாவிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் தேவரகொண்டா, "பிரபலமானவராக இருப்பதால் இது போன்ற சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் இதை ஒரு அனுபவமாகவே பார்க்கிறேன். அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்ததும் நேரில் சென்று ஆஜராகி என் கடமையைச் செய்தேன். அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தேன்" என தெரிவித்துள்ளார்.

Gatta Kusthi: விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி' படம் எப்படி இருக்கிறது.?: முழு விமர்சனம் இதோ.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்