ஆப்நகரம்

Vijay Devarkonda:4 மொழிகளில் உருவாகும் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம்!

விஜய் தேவரகொண்டா நடிக்கவிருக்கும் அடுத்த படம் 4 மொழிகளில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு வருகின்று ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது என்று படக்குழு தெரிவித்துளது.

Samayam Tamil 13 Mar 2019, 5:36 pm
விஜய் தேவரகொண்டா நடிக்கவிருக்கும் அடுத்த படம் 4 மொழிகளில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு வருகின்று ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது என்று படக்குழு தெரிவித்துளது.
Samayam Tamil vjy-ps


அர்ஜுன் ரெட்டி என்ற தெங்கு திரைப்படம்தான் விஜய் தேவரகொண்டா திரை வாழ்க்கையை புரட்டிப் போட்டது. பிரேமம் என்ற மலையாளத் திரைப்படம் எப்படி மொழிகளைத்தாண்டி வெற்றிப்பெற்றதோ அதுபோல் அர்ஜூன் ரெட்டி திரைப்படம் வெற்றியடைந்தது.

சாய்பல்லவியை எப்படி தமிழ் இளைஞர்கள் நேசித்தார்களோ அதுபோல தமிழ் பெண்கள் விஜய தேவரகொண்டாவை நேசிக்க தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் விஜய் தேவர கொண்டா நடிக்கவிருக்கும் ’ஹிரோ’ திரைப்படம் 4 மொழிகளில் (இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் )உருவாக உள்ளது. இந்த திரைப்படத்தை ஆனந்த் அண்ணாமலை இயக்குகிறார். மைத்திரி மூவீஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

தற்போது இந்த திரைப்படத்திற்கு விஜய் தேவர கொண்டா மட்டும்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 22 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குவதற்குள் மற்ற கதாபத்திரங்கள் யாரென்று அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்