ஆப்நகரம்

மெர்சல் படத்திற்கு கிடைத்த பெருமை.. 3 வருடம் கழித்தும் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்

மெர்சல் படத்திற்கு ட்விட்டர் எமோஜி வெளியாகி மூன்று வருடங்கள் ஆவதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Samayam Tamil 18 Aug 2020, 1:00 pm
தளபதி விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவான மிக பிரம்மாண்டமான வசூல் குவித்த படம் மெர்சல். 2017 வருடத்தில் தீபாவளி ஸ்பெஷலாக தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம்.
Samayam Tamil Mersal


தெறி படத்திற்கு பிறகு விஜய் அட்லி உடன் இரண்டாவது முறையாக மெர்சல் படத்திற்காக கூட்டணி சேர்ந்திருந்தது. பாக்ஸ் ஆபீஸில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்தது மெர்சல் படம். சுமார் மூன்று வருடங்கள் ஆகிவிட்டாலும் மெர்சல் படம் இப்போதும் டிவியில் ஒளிபரப்பினால் அதை கொண்டாடும் விஜய் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது மெர்சல் படம் டிவிட்டர் டிரெண்டிங்கில் வந்திருக்கிறது. காரணம் என்னவென்றால் விஜய் ரசிகர்கள் மெர்சல் படம் ஒரு முக்கிய பெருமையை பெற்று 3 வருடங்கள் அவதை தற்போது கொண்டாடி வருகிறார்கள். மெர்சல் படம் வெளியான நேரத்தில் அதன் விளம்பரத்திற்காக ட்விட்டர் நிறுவனம் மெர்சல் எமோஜியை வெளியிட்டு இருந்தது. இந்த பெருமையைப் பெறும் முதல் தென்னிந்திய படம் மெர்சல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

#Mersal, #AalaporaanThamizhan, #MersalArasan, #MersalTeaser, #MersalTrailer, #Thalapathy61, #TSL100, #MersalMusicLive, #MersalDiwali, #BlockbusterMersal, #MersalAlbum #மெர்சல் உள்ளிட்ட பல விதமான ஹேஷ்டேக்குகள் பதிவிடும் போது விஜய் புகைப்படம் எமோஜியாக அருகில் காட்டப்பட்டது. இதனை பற்றி தங்கள் நினைவுகளை விஜய் ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த எமோஜி 72 நாட்கள் பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு பின்பு ட்விட்டர் நிறுவனம் அதை நீக்கியது.


மெர்சல் படத்தில் விஜய் மூன்று ரோல்களில் நடித்திருப்பார். ஒன்று வெற்றிமாறன் என்ற பெயருடன் கிராமத்தில் வாழும் கதாபாத்திரம். அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். அவர்கள் ஊரில் திருவிழா ஒன்று நடக்கும் போது தீ விபத்து ஏற்படுகிறது அந்த சமயத்தில் தான் விஜய்க்கு புரிகிறது ஒரு கோவிலை விட மருத்துவமனை அவசியமென்று. அதனால் அங்கு மருத்துவமனை கட்டுகிறார். அங்கு வில்லன் எஸ் ஜே சூர்யா தான் மருத்துவராக வருகிறார். விஜய்யை ஏமாற்றி அவரிடமிருந்து மருத்துவமனையை எடுத்துக்கொள்ளும் எஸ்ஜே சூர்யா, பணத்திற்காக மருத்துவத்தில் பல மோசமான விஷயங்களை செய்கிறார். இதை தட்டிக் கேட்கும் வெற்றிமாறன் கொல்கிறார். விஜய்யின் இரண்டு மகன்களும் வளர்ந்த பிறகு அப்பாவை கொலை செய்த எஸ் ஜே சூர்யாவை எப்படி பழி வாங்குகிறார்கள் என்பது தான் மீது படத்தின் கதை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்