ஆப்நகரம்

விஜய் ரசிகர்கள் செய்த உதவி: நெகிழ்ச்சியான பாம்பே சர்க்கஸ் கலைஞர்கள்

லாக்டவுனுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வந்து தற்போது லாக்டவுனால் இங்கேயே சிக்கிக்கொண்ட பாம்பே சர்க்கஸ் கலைஞர்களுக்கு நடிகர் விஜய்யின் ரசிகர்கள் உதவி செய்துள்ளனர்.

Samayam Tamil 28 Apr 2020, 4:25 pm
கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விஜய் ரசிகர்கள் பல்வேறு உதவிகளை தொடர்நது செய்து வருகின்றனர்.
Samayam Tamil Vijay fans help Bombay Circus staffs


இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஒரு மாத காலமாக லாக்டவுன் காரணமாக தவித்து வரும் மும்பையை சேர்ந்த பாம்பே சர்க்கஸ் தொழிலாளர்கள் 126 பேருக்கு விஜய் ரசிகர்கள் உதவி செய்துள்ளனர்.

இவர்கள் உணவின்றி தவிப்பதாக மீடியாக்களில் செய்தி வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரும் அவர்களுக்கு உதவி செய்துவருகின்றனர். அவர்கள் பற்றி அறிந்த நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து அவர்களுக்கு செய்யும்படி தெரிவித்துள்ளார்.

அதனால் விஜய் ரசிகர்கள் பாம்பே சர்க்கஸ் சென்று அங்கிருப்பவர்கள் தேவை என்ன என கேட்டு உதவி செய்துள்ளனர்.

விஜய் மக்கள் மன்ற நிர்வாகியான ராஜா என்பவர் தான் இந்த உதவியை செய்துள்ளார். அவர் 120 கிலோ அரிசி, 20 கிலோ கோதுமை மாவு, மற்ற மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் என சுமார் 8600 ரூபாய்க்கு அவர் உதவி பொருட்கள் வாங்கி அவர்களுக்கு கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய் தான் இந்த உதவியை செய்ய சொன்னார் என அவர்களிடம் சொன்னாராம் அவர். அதை கேட்டு அவர்கள் அதிகம் மகிழ்ச்சி அடைந்தார்களாம்.


விஜய் ஏற்கனவே 1.3 கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரண நிதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி லாக்டவுனால் வறுமையில் வாடும் தனது ரசிகர்களுக்கும் நேரடியாக வங்கி கணக்கில் 5000 ருபாய் பணம் செலுத்தியுள்ளார் அவர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்