ஆப்நகரம்

கொரோனா பிரச்சனை: போலீசாருக்கு உதவிய விஜய் ரசிகர்கள்

கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் இந்த நேரத்தில் உயிரை பணயம் வைத்து வீதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு முகக்கவசம் தயாரித்து கொடுத்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.

Samayam Tamil 26 Mar 2020, 11:21 am
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் 649 ஆக அதிகரித்துள்ளது . அதில் 42 பேர் குணமடைந்துள்ளனர்.
Samayam Tamil Vijay fans help police


மேலும் நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 683 பேர்உயிரிழந்துள்ளனர் . அது மட்டுமின்றி ஸ்பெயினில் 656, ஈரானில் 143 மற்றும் பிரான்ஸில் 231 நபர்கள் என உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைவதை தடுக்க தற்போது அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதனால் தற்போது மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருந்து வருகின்றனர்.

மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருந்தாலும் உயிரை பணயம் வைத்து மருத்துவர்களும், பாதுகாப்பு பணிகளில் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 144 தடை உத்தரவை கடைபிடித்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கு உதவும் விதமாக தற்போது விஜய் ரசிகர்கள் 1000 காக்கி நிற முக கவசங்களை தயாரித்து கொடுத்துள்ளனர்.

இதற்கு சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்