ஆப்நகரம்

கிழிந்த பேனர்களை வைத்தும் உதவி செய்யும் தளபதி விஜய் ரசிகர்கள்!!

அதிமுகவினர் கிழித்த பேனர்களை, விஜய் ரசிகர்கள் சாலையோரத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்து உதவியுள்ளனர்.

Samayam Tamil 10 Nov 2018, 3:26 am
சர்கார் பட பிரச்சனையில், அதிமுகவினர் கிழித்த பேனர்களை, விஜய் ரசிகர்கள் சாலையோரத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்து உதவியுள்ளனர்.
Samayam Tamil கிழிந்த பேனர்களை வைத்தும் உதவி செய்யும் தளபதி விஜய் ரசிகர்கள்!!
கிழிந்த பேனர்களை வைத்தும் உதவி செய்யும் தளபதி விஜய் ரசிகர்கள்!!


நடிகர் விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘சர்கார்’. சன்பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த நவம்பர் 6 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, வசூலில் சாதனைப் படைத்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, இப்படத்தில் ஆளும் அதிமுக கட்சியின் இலவசத் திட்டங்களை விமர்சித்துள்ளதாகவும், ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தியதாகவும் அதிமுக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டு, பேனர்களை கிழித்து வன்முறை செய்தனர். மேலும், நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது அதிமுகவினர் காவல்நிலையத்தில் வழக்குப் போட்டனர்.

இதன் பின்னர் ஆளும் கட்சியின் அழுத்தம் காரணமாக, சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்கியது. இந்நிலையில், அதிமுகவினர் கிழித்துப் போட்ட பேனர்களை விஜய் ரசிகர்கள் சாலையோரங்களில் உள்ளவர்களிடம் கொடுத்து உதவி வருகின்றனர். விஜய் ரசிகர்களின் உதவிக்கு அம்மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்