ஆப்நகரம்

கொரோனா பிரச்சனை: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பிய விஜய் ரசிகர்கள்

கொரோனா நிவாரண பணிகளுக்காக விஜய் ரசிகர் மன்றத்தினர் 49 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளனர்.

Samayam Tamil 4 Apr 2020, 1:54 pm
கொரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தற்போது 411 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Vijay fans donate 49k rupees for corona relief


பிரபலங்கள் பலரும் கொரோனாவுக்கு எதிராக போராடும் அரசுக்கு உதவ நிதி அளித்து வருகின்றனர். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் உதவி அளித்தார்.

விஜய் ரசிகர்கள் பலரும் தங்கள் பகுதிகளில் பல்வேறு மக்கள் நல பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களுக்கு அரிசி மூட்டை, காய்கறி, பால் என தொடர்த்து அளித்து வருகின்றனர். மேலும் ஊரடங்கில் 24 மணி நேரமும் அயராது பணியாற்றிக்கொண்டிருக்கும் போலீசார் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு சமைத்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி விஜய் ரசிகர் மன்றத்தினர் முதலமைச்சர் நிவராண நிதிக்காக 49 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் செ.சாந்தி DRO அவர்களிடம் 49 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளனர்.



அதன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் ரசிகர்களின் இந்த உதவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்