ஆப்நகரம்

இக்கட்டான நேரத்தில் தானாக வந்து உதவிய விஜய் ரசிகர்கள்

கொரோனாவால் வேலையிழந்து தற்போது வறுமையில் ஒரு வேலை சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருக்கும் தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக விஜய் ரசிகர்கள் அரிசி மூட்டை வழங்கியுள்ளனர்.

Samayam Tamil 24 Mar 2020, 10:56 am
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள தியேட்டர்கள், மால்கள் என பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் சென்ற வாரமே மூடப்பட்டது.
Samayam Tamil Vijay


மேலும் சினிமா படங்கள், சீரியல்கள் ஆகியவற்றின் படப்பிடிப்பும் முழுமையாக நிறுத்தப்பட்டன. அதனால் சினிமாவை மட்டும் நம்பி இருக்கும் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் தினமும் வரும் சம்பளத்தை நம்பித்தான் குடும்பத்தை நடத்தி வருபவர்கள். தற்போது ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் உணவிற்கு கூட வழி இல்லாமல் இருக்கின்றனர் என சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி (FEFSI) அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் என சினிமா துறையினர் உதவ முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார் அவர். அதை ஏற்று நடிகர் சூர்யா குடும்பம் 10 லட்சமும், சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாயும் இதுவரை வழங்கியுள்ளனர்.

இவர்களுக்கு உதவ விஜய் ரசிகர்களும் தற்போது களத்தில் இறங்கியுள்ளனர். R.K. செல்வமணியின் வேண்டுகோளை ஏற்று சேலம் மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 10 மூட்டை அரிசியை வழங்கியுள்ளனர்.

இதற்காக விஜய் ரசிகர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்