ஆப்நகரம்

மாரியம்மா, பிகில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ரிலீஸாகணும்: மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகாஸ்

பிகில் படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டுள்ளனர்.

Samayam Tamil 23 Oct 2019, 9:25 am
விஜய்யின் பிகில் படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. படத்தின் கதை திருடப்பட்டது என்று கூறி இயக்குநர் கே.பி. செல்வா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Samayam Tamil bigil prayer


பிகில் இசை வெளியீட்டு விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய் தங்களை அவமதித்துவிட்டதாகக் கூறி பூ தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விஜய் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிகிலுக்கு முதலில் கறிக்கட்டை இப்போ பூவால் பிரச்சனை: மன்னிப்பு கேட்பாரா விஜய்?

இந்நிலையில் பிகில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதற்கிடையே பிகில் உலகம் முழுவதும் 4 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 200 ஸ்கிரீன்களில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். பிகில் படத்திற்கு திரும்பும் பக்கம் எல்லாம் பிரச்சனை எழுந்து கொண்டிருக்கிறது.

உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்ல போ: விஜய் ரசிகரை கலாய்த்த எஸ்.ஆர். பிரபு

இதையடுத்து எந்த பிரச்சனையும் இன்றி பிகில் படம் ரிலீஸாகி வெற்றி பெற வேண்டி விஜய் ரசிகர்கள் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பிரசன்ன மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்ததுடன் மண் சோறு சாப்பிட்டுள்ளனர்.



ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. வழக்கமாக விஜய் படம் வருகிறது என்றால் அதை கொண்டாடித் தீர்க்க திட்டம் போடும் ரசிகர்கள் இம்முறை கவலையில் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்