ஆப்நகரம்

தந்தையாக விஜய்சேதுபதி மகனுக்கு சொன்ன அறிவுரை!

நடிகர் விஜய் சேதுபதி தனது மகன் மற்றும் மகளுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

Samayam Tamil 16 Jun 2019, 8:18 pm
விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ’சிந்துபாத்’. சு அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், அஞ்சலி ஜோடியாக நடித்துள்ளார்.
Samayam Tamil Vijay Sethupathi


இப்படத்தில் முதல்முறையாக விஜய்சேதுபதியின் மகன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சு. அருண்குமார் இயக்கிய மூன்று படங்களிலும் விஜய் சேதுபதிதான் கதாநாயகனாக நடித்துள்ளார்.

பண்ணியாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படமாக இப்படம் வருகிறது. இந்தப் படத்தில் தன் மகன் சூர்யா நடித்தது பற்றி விஜய்சேதுபதி தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

”இந்தப் படத்தில் என் மகன் சூர்யாவை நடிக்க வைக்கப் போவதாக அருண்குமார் சொன்னபோது, எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் நான் நடிக்கவில்லை என்றாலும், சூர்யாவை கண்டிப்பாக நடிக்க வைப்பேன் என்று சொன்னார்.

என் மகன் சூர்யாவிற்கு வாழ்க்கையில் எல்லாமே சொல்லிக் கொடுத்துள்ளேன். படிப்பு, வாழ்க்கை என அவன் விருப்பப்பட்டதை செய்ய சொல்லியிருக்கிறேன். அதனால் அவன் நடிக்க வந்ததில் எனக்கு ஆட்சேபனையில்லை.

நான் எந்த ஒரு விசயத்துக்காகவும் என் மகனுக்கு அறிவுரை கூறமாட்டேன். அவனது விருப்பம் தான். என மகளும் ’சங்கத் தமிழன்’ படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கும் இதே அறிவுரை தான்.

அவர் விஷயத்தை அவரே முடிவு செய்வார் என்று கூறியுள்ளார். இன்றைய தந்தையர் தினத்தில் குழந்தைகளை அவர்களின் விருப்பத்தில் வாழவிடும் விஜய்சேதுபதியின் அறிவுரை பெரும் பாராட்டுக்குரியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்