ஆப்நகரம்

ஜெய்ப்பூரில் விஜய் சேதுபதி, ராதிகா எஸ்பிபிக்கு அஞ்சலி

எஸ்பிபிக்கு விஜய் சேதுபதி மற்றும் ராதிகா இருவரும் ஜெய்ப்பூரில் இருந்தே அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.

Samayam Tamil 26 Sep 2020, 12:44 pm
பாடகர் எஸ்பிபியின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதற்கு மிக குறைவாக இருந்ததால் சினிமா நட்சத்திரங்கள் அதிகம் பேர் நேரில் வரவில்லை.
Samayam Tamil Vijay Sethupathi tribute to SPB


எஸ்பிபி உடல் அடக்கம் செய்யப்படும் சற்று நேரத்திற்கு முன்பு விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் காலையில் பாரதிராஜா, பாடகர் மனோ உள்ளிட்ட பலர் நேரில் வந்து கண்ணீர் மல்க அவருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தன் அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக ஜெய்ப்பூரில் இருக்கிறார். அந்த படத்தின் ஷூட்டிங்கில் ராதிகாவும் பங்கேற்று இருக்கிறார். எஸ்பிபியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதால் அவர்கள் ஜெய்ப்பூரில் இருந்தே அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.

எஸ்பிபியின் புகைப்படத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அஞ்சலி செலுத்தி இருக்கிறது படக்குழு. அதன் புகைப்படங்களை ராதிகா ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.


அது மட்டும் இன்று ராதிகா எஸ்பிபி-யை கடைசியாக இலங்கையில் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மிக உருக்கமாக ராதிகா பகிர்ந்து இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்