விஜய் சேதுபதியின் 25வது படமான ’சீதக்காதி’ தற்போது படப்பிடிப்புடன் ஆரம்பமாகியுள்ளது.
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு பயணித்து தற்போது வெற்றி பெற்று வருகிறார். அவருக்கு திருப்புமுனை தந்த படம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தகாணோம்‘. இப்படத்தை பாலாஜி தரணீதரன் இயக்கினார்.
அதன்பின்னர் விஜய் சேதுபதி மளமளவென பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் பாலாஜி தரணீதரனோ நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராமை வைத்து ‘ஒரு பக்க கதை’ என்ற படத்தை மட்டும் இயக்கினார். இப்படம் பல்வேறு பிரச்னைகளால் முடங்கிபோனது. தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியும், பாலாஜி தரணீதரனும் மீண்டும் இணைவதாக நேற்று செய்திவெளியானது. இருவரும் இணையும் புதிய படத்திற்கு ‘சீதக்காதி’ என்று பெயரிட்டுள்ளனர். விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி வரும் இப்படம் நேற்று தமிழ் புத்தாண்டில் முறைப்படி ஆரம்பமானது. இதில் விஜய்சேதுபதி, பாலாஜி, காயத்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் கஷ்டப்பட்டு பயணித்து தற்போது வெற்றி பெற்று வருகிறார். அவருக்கு திருப்புமுனை தந்த படம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தகாணோம்‘. இப்படத்தை பாலாஜி தரணீதரன் இயக்கினார்.
அதன்பின்னர் விஜய் சேதுபதி மளமளவென பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் பாலாஜி தரணீதரனோ நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராமை வைத்து ‘ஒரு பக்க கதை’ என்ற படத்தை மட்டும் இயக்கினார். இப்படம் பல்வேறு பிரச்னைகளால் முடங்கிபோனது. தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியும், பாலாஜி தரணீதரனும் மீண்டும் இணைவதாக நேற்று செய்திவெளியானது. இருவரும் இணையும் புதிய படத்திற்கு ‘சீதக்காதி’ என்று பெயரிட்டுள்ளனர். விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி வரும் இப்படம் நேற்று தமிழ் புத்தாண்டில் முறைப்படி ஆரம்பமானது. இதில் விஜய்சேதுபதி, பாலாஜி, காயத்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.