ஆப்நகரம்

இதுக்குதான் காத்துட்டு இருக்கேன் - வாக்களித்த பின் விஜய் சேதுபதி நம்பிக்கை

வாக்களித்தது மிகவும் பெருமைக் குரிய விஷயம். 18 வயதான போது வீட்டில் முடிவெடுக்கும் போதே நம்மாளை கேட்பார்களா என்று தெரியாது.

Samayam Tamil 18 Apr 2019, 4:32 pm
வாக்களித்தது மிகவும் பெருமைக் குரிய விஷயம். 18 வயதான போது வீட்டில் முடிவெடுக்கும் போதே நம்மாளை கேட்பார்களா என்று தெரியாது. ஆனால் இந்த நாட்டில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற உரிமையை கொடுக்கக் கூடிய வாக்களிக்கும் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது பெருமையான விஷயம்.
Samayam Tamil Vijay Sethupathi (3)


நானும் வாக்களித்துவிட்டேன். எல்லோரையும் போல நல்லது நடக்கும் என்று நானும் நன்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றேன்.

மின்னனு வாக்குபதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு, “நானும் பல நாட்களாக வாட்ஸ் அப்பில் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். அதற்கான தீர்வு என்னிடம் இல்லை. ஆனால் முறைகேடு நடப்பது உண்மை தான் என நம்புகிறேன்.

சமீப காலமாக மக்களிடம் அரசியல் குறித்த அறிவு அதிகரித்துள்ளது. அவர்கள் செய்தி தொலைக்காட்சி, மீம்ஸ், சமூக வலைத்தளங்களை அவர்கள் அரசியல் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டுள்ளனர் என நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்