ஆப்நகரம்

முத்தையா முரளிதரனாக நடிக்க, இது தான் காரணம் - விஜய் சேதுபதி!!

தமிழின் முன்னணி ஹீரோவாக வலம் வரும் விஜய் சேதுபதி, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தான் அந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Aug 2019, 2:39 pm
தன்னுடைய எளிமையாலும் எதார்த்தமான நடிப்பாலும் பெரும்பாலான ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றவர்தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. ஆரம்ப காலங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த சேதுபதி, அறிமுக இயக்குனர்களுடன் இணைந்து "பீசா", "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்", "சூது கவ்வும்" என்று தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து தமிழக மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றார்.
Samayam Tamil ggn


விஜய் சேதுபதி தன்னுடைய நேர்த்தியான பேச்சுத் திறனாலும், ரசிகர்களிடம் காட்டும் அன்பினாலும், அவருடைய புகழ் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே சென்றது. தற்பொழுது மணிகண்டன் இயக்கத்தில் "கடைசி விவசாயி" மற்றும் விஜய் சந்தர் இயக்கத்தில் "சங்கத் தமிழன்" என்ற இரண்டு படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் "துக்ளக் தர்பார்" என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி


தற்போது பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் முரளிதரன் பற்றிய திரைப்படத்தில் விஜய் செதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், இலங்கை கிரிக்கெட் வீரரின் பாத்திரத்தில், விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என வேண்டுகோள் விடுத்தனர். மேலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Also Read : டிசைனருக்கு கிடைத்த முதல் பரிசு: பிகில் விஜய்க்கு நன்றி சொன்ன கோபி பிரசன்னா!


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக 800 விக்கெட்களை வீழ்த்திய முரளிதரன் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டு, இப்படத்திற்கு "800" என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இப்படத்தில் விஜய் செய்துபதி நடிக்கப் போவதில்லை என்று விஜய் சேதுபதி சொன்னதாகவும் வதந்திகள் பரவின.

விஜய் சேதுபதி


ஆனால், இதற்கு விஜய் சேதுபதி சில நாட்களாக எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற மெல்போர்ன் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற விஜய் சேதுபதி, முரளிதரன் வாழ்க்கை திரைப்படத்தில் தான் நடிக்க இருப்பதாகவும், அப்படம் யாருடைய மனதையும் புன்படுத்தாத படமாக இருக்கும், என்று பேசி வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

Also Read : இந்தியன் 2 படத்திலிருந்து விலகிய பிரபல நடிகை!

சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் இந்த படத்தில் நடிப்பது குறித்து விளக்கம் கூறிய விஜய் சேதுபதி, "நான் சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பார்த்தது இல்லை. முரளிதரனிடமே இதை நேரில் தெரிவித்திருக்கிறேன். இந்தப் படம் முழுக்க கிரிக்கெட்டை பற்றிய கதை அல்ல. அவரது வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை மையப் படுத்தி இக்கதை நகர்கிறது. மேலும் என் மீது அன்பு வைத்துள்ள யாரையும் நான் இழக்க மாட்டேன். என்னை நேசிப்பவர்களை காயப்படுத்தும் சுயநலவாதியாக நான் எப்போதும் இருக்க மாட்டேன். அதையும் மீறி யாரையாவது காயப்படுத்தினால் மன்னிப்பு கேட்கவும் நான் தயங்க மாட்டேன்" என்று கூறியுள்ளார். மேலும் இப்படம் யார் மனதையும் புண்படுத்தாது என்று கூறினார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி


இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன்கள் டோனி, சச்சின் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே திரைப்படங்களாக வந்தன. கபில்தேவ் உலக கோப்பையை வென்றதை வைத்து தற்போது "83" என்ற பெயரில் படம் தயாராகி வருகிறது. இதுபோல் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கையையும் படமாக எடுக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்