ஆப்நகரம்

கையில் கிடைத்த பரிசை நன்கொடையாக வழங்கிய விஜய் சேதுபதி!

தனக்கு வழங்கிய பரிசுத் தொகையை ஒரு அமைப்புக்கு நன்கொடையாக வழங்கினார் நடிகர் விஜய் சேதுபதி!

TNN 27 Dec 2017, 6:03 pm
தனக்கு வழங்கிய பரிசுத் தொகையை ஒரு அமைப்புக்கு நன்கொடையாக வழங்கினார் நடிகர் விஜய் சேதுபதி!
Samayam Tamil vijay sethupathi gave donation to organization
கையில் கிடைத்த பரிசை நன்கொடையாக வழங்கிய விஜய் சேதுபதி!


சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி செய்த காரியம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் செய்யும் சில காரியங்களினால் மக்களிடம் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. அந்த நல்ல மனதுக்காகத்தான் அவரின் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் வெற்றி பெறுகினறன.

சமீபத்தில் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் சிறந்த படமாக ‘ஒரு கிடாயின் கருணை’ மனு தேர்வானது. விஜய் சேதுபது நடித்த ‘விக்ரம் வேதா’ இரண்டாவது சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ‘மாநகரம்’ படத்திற்கு சிறப்பு ஜூரி விருது கிடைத்தது. அதோடு விஜய் சேதுபதிக்கு அமிதாப்பச்சன் யூத் ஐக்கான் விருது வழங்கப்பட்டது. அதனுடன் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை கொடுக்கப்பட்டது.

கையில் கிடைத்த ஒரு லட்ச பரிசுத்தொகையை வாங்கிய கையோடு அதே மேடையில் அதை இந்தோ சினி அப்ரிஷியேசன்ஸ் அமைப்புக்கே நன்கொடையாக கொடுத்துவிட்டார். இந்த நிகழ்வால் அவர் மீதான மதிப்பு மேலும் உயர்ந்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்