லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் கடந்த ஜனவரி மாதம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. படத்தை பார்த்த அனைவரும் வில்லன் விஜய் சேதுபதியை கொண்டாடியது தனிக் கதை. விஜய் சேதுபதி கூலாக நடித்து மற்றவர்களை கடுப்பேற்றினார். அவரின் நடிப்பை பலரம் பாராட்டினார்கள். ஹீரோ விஜய் தான் என்றாலும், மாஸ்டர் விஜய் சேதுபதியின் படம் என்று விமர்சனம் எழுந்தது. இதை பார்த்த தீவிர விஜய் ரசிகர்களோ, எஸ்.ஏ.சி. கதை கேட்டிருந்தால் அண்ணனுக்கு இப்படி நடக்கவிட்டிருப்பாரா என்று வருத்தப்பட்டார்கள்.
கதை கேட்கும்போதே வில்லனுக்கு எதற்காக இவ்வளவு பில்ட்அப் என்று கூறி லோகேஷை கதையை மாற்ற வைத்திருப்பார் எஸ்.ஏ.சி. என்றார்கள் விஜய் ரசிகர்கள். ஆனால் விஜய் பட வில்லனை சினிமா ரசிகர்கள் கொண்டாடுவது ஏற்கனவே நடந்திருக்கிறது.
தரணி இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான கில்லி படத்தில் விஜய் கபடி வீரராக நடித்திருந்தார். அந்த படத்தில் ஈவு, இரக்கமே இல்லாத வில்லன் முத்து பாண்டியாக பிரகாஷ் ராஜ் மிரட்டியிருந்தார். அவர் வில்லன் தான் என்றாலும் ரசிகர்களை கவர்ந்தார்.
அதிலும் குறிப்பாக அவர் த்ரிஷாவிடம் ஐ லவ் யூ செல்லம் என்று சொன்ன விதம் அருமை. அந்த ஐ லவ் யூ செல்லம் வசனம் இன்றும் கூட பிரபலம். அவர் டென்ஷனாகி கத்துவது எல்லாம் ரசிக்கும்படி இருந்தது.
விஜய்யை கண்டுபிடிக்கும்போது காவல் நிலைய கம்ப்யூட்டரில் ஜெமினி கணேசனின் புகைப்படம் வர அப்பா, பாட்டு பாடுவா பார்த்து பேசவா ஜெமினி கணேசன்பா என்று பிரகாஷ் ராஜ் கடுப்பாகும் காட்சி கூட ரசிக்கும்படி இருந்தது.
ஆக, விஜய் படத்தில் ஒரு வில்லன் ஸ்கோர் செய்தது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
கதை கேட்கும்போதே வில்லனுக்கு எதற்காக இவ்வளவு பில்ட்அப் என்று கூறி லோகேஷை கதையை மாற்ற வைத்திருப்பார் எஸ்.ஏ.சி. என்றார்கள் விஜய் ரசிகர்கள். ஆனால் விஜய் பட வில்லனை சினிமா ரசிகர்கள் கொண்டாடுவது ஏற்கனவே நடந்திருக்கிறது.
தரணி இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான கில்லி படத்தில் விஜய் கபடி வீரராக நடித்திருந்தார். அந்த படத்தில் ஈவு, இரக்கமே இல்லாத வில்லன் முத்து பாண்டியாக பிரகாஷ் ராஜ் மிரட்டியிருந்தார். அவர் வில்லன் தான் என்றாலும் ரசிகர்களை கவர்ந்தார்.
அதிலும் குறிப்பாக அவர் த்ரிஷாவிடம் ஐ லவ் யூ செல்லம் என்று சொன்ன விதம் அருமை. அந்த ஐ லவ் யூ செல்லம் வசனம் இன்றும் கூட பிரபலம். அவர் டென்ஷனாகி கத்துவது எல்லாம் ரசிக்கும்படி இருந்தது.
விஜய்யை கண்டுபிடிக்கும்போது காவல் நிலைய கம்ப்யூட்டரில் ஜெமினி கணேசனின் புகைப்படம் வர அப்பா, பாட்டு பாடுவா பார்த்து பேசவா ஜெமினி கணேசன்பா என்று பிரகாஷ் ராஜ் கடுப்பாகும் காட்சி கூட ரசிக்கும்படி இருந்தது.
ஆக, விஜய் படத்தில் ஒரு வில்லன் ஸ்கோர் செய்தது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.