ஆப்நகரம்

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் கோகுல்

விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளார் டைக்டர் கோகுல்.

TOI Contributor 21 May 2016, 6:04 pm
விஜய் சேதுபதியுடன் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளார் டைக்டர் கோகுல்.
Samayam Tamil vijay sethupathi joins hands with gokul
விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் கோகுல்


ஜீவா, ஸ்ரேயா நடித்த ‘ரௌத்திரம்’ படத்தை இயக்கியவர் கோகுல். தமிழில் வெற்றிப்பெற்ற இப்படம், பின்னர் தெலுங்கு மற்றும் இந்தியில் டப் செய்யப்பட்டது. இதனையடுத்து, விஜய்சேதுபதி, ஸ்வாதி, நந்திதா, அஸ்வின் நடித்த ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கினார்.

கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை இப்படம் பெற்றது. தற்போது கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் நடிக்கும் ‘காஷ்மோரா’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் மீண்டும் விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் இணையவிருக்கிறாராம் கோகுல். ஆம். ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் சொல்லப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்