ஆப்நகரம்

விஜய் சேதுபதி தயாரிப்பாளர் ஆனது ஏன்? நெகிழ்ச்சியான பின்னணி

மேற்குத் தொடர்ச்சி மலை படம் குறித்து அதன் தயாரிப்பாளரான நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

Samayam Tamil 27 Aug 2018, 12:26 pm
சென்னை: மேற்குத் தொடர்ச்சி மலை படம் குறித்து அதன் தயாரிப்பாளரான நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
Samayam Tamil vs270818_1


லெனின் பாரதி இயக்கத்தில் ஆண்டனி, காயத்ரி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் உண்மையான நிலையைச் சித்தரிப்பதாக பெரும் பாராட்டைப் பெற்றுவருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தைத் தயாரிக்க நினைத்து ஏன் எனக் குறிப்பிட்டார்.
“நான் ஜூனியர் ஆர்டிஸ்டாக இருந்தபோது என்னை மிகவும் மனிதாபிமானத்தோடும் அன்போடும் நடத்தியவர் லெனின் பாரதி. அவருக்காகத்தான் இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என விரும்பினேன்.” என்றார். மேலும், “இந்தப் படத்தின் மூலம் லாபத்தில் ஒரு ரூபாய்கூட எனக்கு வேண்டாம். எவ்வளவு கிடைத்தாலும் அதை படத்தின் பிரமோஷனுக்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டேன்” என்றும் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்