ஆப்நகரம்

சிறப்பு.. கோயில்கள் சர்ச்சையில் விஜய் சேதுபதி ஜோதிகா-சூர்யாவுக்கு ஆதரவு

ஜோதிகா கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என சூர்யா வெளியிட்ட அறிக்கைக்கு விஜய் சேதுபதி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Apr 2020, 10:31 am
நடிகை ஜோதிகா ஒரு விருது விழாவில் மேடையில் பேசியது சர்ச்சையில் சிக்கியது. தஞ்சை பெரிய கோவிலை அரண்மனை போல பராமரிக்கிறார்கள், அதற்கு மக்களும் பணம் கொடுக்கிறார்கள். ஆனால் அதன் அருகில் இருக்கும் மருத்துவமனையில் பார்த்த விஷயங்களை சொல்ல முடியவில்லை. கோவில்களுக்கு பணம் கொடுப்பது போல மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கும் கொடுங்கள் என கூறியிருந்தார்.
Samayam Tamil Vijay Sethupathi supports Suriyas Statement


இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது பற்றி நேற்று சூர்யா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். "அன்பை விதைப்போம்..." என அதில் குறிப்பிட்டிருந்தார்.

"பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர்."

"அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். 'மதங்களை கடந்து மனிதமே முக்கியம்' என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம்" என சூர்யா அதில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் விஜய் சேதுபதி ட்விட் செய்துள்ளார். "சிறப்பு.." என சூர்யா வெளியிட்ட அறிக்கை பற்றி அவர் கூறியுள்ளார்.


இதற்கு முன்பு ஜோதிகாவுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி ட்விட் போட்டிருந்தார் என போலியான ஒரு ட்விட் வைரலானது. அது போலியானது என்று அப்போது விளக்கம் கூறியிருந்தார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் தான் தற்போது சூர்யாவின் அறிக்கையை பாராட்டியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்