ஆப்நகரம்

தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதியின் ரோல் இதுதான்

தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நாசர் மகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 20 May 2020, 10:12 am
கமல்ஹாசன் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட படம் 'தலைவன் இருக்கின்றான்'. 1992ல் வெளிவந்த தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் தான் அது என கூறப்பட்டு வருகிறது. அந்த படத்தின் ஷூட்டிங் துவங்காமல் நீண்ட காலமாக தாமதமாகி வருகிறது.
Samayam Tamil Vijay Sethupathi and Kamal Haasan


தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என சமீபத்தில் செய்திகள் பரவியது. ஆனால் அது என்ன ரோல் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி இந்த படத்தில் நாசரின் மகனாகத்தான் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. தேவர் மகன் பட கதையில் நாசர் இறந்துவிட்ட நிலையில், அவரது மகனாக விஜய் சேதுபதி இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி கமல்ஹாசனை பழிவாங்க துடிப்பது போல இந்த படத்தின் கதை இருக்கும் என கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி தற்போது கைவசம் பல படங்கள் வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்து உள்ளார். அதன் ரிலீஸுக்காக தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

சமீப காலமாக வில்லன் ரோல்களில் அதிகம் நடித்துவரும் விஜய் சேதுபதி, தற்போது கமலுக்கு வில்லனாகவும் நடிக்கப் போகிறார்.

கமல்ஹாசனே இந்த படத்தினை இயக்கவுள்ளார் என கூறப்படும் நிலையில் அதற்கான பரீ-ப்ரொடக்ஷன் பணிகளும் முன்பே நடந்தது குறிப்பிடத்தக்கது. கமல் ஹாசன் தற்போது நடித்து வரும் இந்தியன் 2 படத்தினை தயாரித்து வரும் லைகா நிறுவனம் தான் தலைவன் இருக்கின்றான் படத்தையும் தயாரிக்கிறது.

1992ல் வெளிவந்த தேவர் மகன் படத்தில் சிவாஜி கணேசன், கமல் ஹாசன், ரேவதி, கவுதமி மற்றும் நாசர் போன்றவர்கள் நடித்திருந்தனர்.

லைகா நிறுவனம் மற்றும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ள தலைவன் இருக்கின்றான் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்க உள்ளார். 19 வருடங்களுக்கு பிறகு கமல் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இணைந்துள்ளனர். கடைசியாக 2000 வருடத்தில் தெனாலி படத்தில் தான் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவன் இருக்கின்றான் படத்தின் மூலமாக நடிகர் வடிவேலுவும் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். 24ம் புலிகேசி படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்காததால் வடிவேலுவை வைத்து எந்த தயாரிப்பாளரும் படம் எடுக்கக் கூடாது என்ற முடிவில் சினிமா துறையினர் உள்ள நிலையில் தான் வடிவேலுவுக்கு கமல்ஹாசன் வாய்ப்பு வழங்கியுள்ளார். வடிவேலு இந்த படத்தில் நடிப்பதை அதிகாரபூர்வமாக ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் மற்றொரு படமான இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கும் பாதியில் நிற்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் நடந்துவந்த போது திடீரென கிரேன் சரிந்து விழுந்தது. அதில் மூன்று பேர் பலி ஆகினர்.

அந்த விபத்துக்கு பிறகு ஷூட்டிங் துவங்கப்படாமல் இருந்தது. அதனை தொடர்ந்து கொரோனா லாக்டவுன் போடட்டதால் ஷூட்டிங் தள்ளிப்போனது. இப்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் இந்தியன் 2 எடிட்டிங் பணிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை 60 சதவீத ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், மீதி பகுதிக்கான ஷூட்டிங் லாக்டவுன் முடிந்து அரசு அனுமதி அளித்த பிறகு துவங்கும் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்