ஆப்நகரம்

'மாமா ஐ லவ் யூ மாமா'... விஜய் சேதுபதியின் வெறித்தனமான ரசிகை... வேற லெவல்!

விஜய் சேதுபதியின் வெறித்தனமான ரசிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 30 Apr 2022, 9:24 am
விஜய் சேதுபதியின் வெறித்தனமான ரசிகை ஒரு அவரது முகத்தை கையில் பச்சைக்குத்தி கண்கலங்கி பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil vijay sethupathis diehard fan video goes viral
'மாமா ஐ லவ் யூ மாமா'... விஜய் சேதுபதியின் வெறித்தனமான ரசிகை... வேற லெவல்!



விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து இன்று முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லன் கதாப்பாத்திரத்தில் கலக்கி வருகிறார் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என தடம் பதித்து வரும் விஜய் சேதுபதி எந்த கதாப்பாத்திரம் என்றாலும் பட்டையை கிளப்பி வருகிறார்.

தாய் உள்ளம்

நடிப்பால் மட்டுமின்றி தனது நல்ல உள்ளத்தாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. வறுமையில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் வள்ளலாக வாரி வழங்கி வருகிறார். ஏழை மாணவர்கள் கல்வி உதவிக்கும் கைக்கொடுத்து வருகிறார் விஜய் சேதுபதி. சினிமாதுறையிலேயே நலிவடைந்த கலைஞர்களுக்கு தேடி போய் தாய் உள்ளத்துடன் உதவி வருகிறார் விஜய் சேதுபதி.

மக்கள் செல்வன்

அவர் செய்யும் உதவிகள் பெரும்பாலும் வெளியே தெரியவில்லை. இதுவே அவரை ரசிகர்கள் மக்கள் செல்வன் என அழைக்க காரணம். நடிப்பையும் தாண்டி தனது உதவும் மனப்பான்மையால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் தனக்கென ஸ்ட்ராங்கான ஒரு இடத்தை சப்பளம் போட்டு அமர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.

ஐ லவ் யூ மாமா

இந்நிலையில் விஜய் சேதுபதியின் வெறித்தனமான ரசிகை ஒருவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தேவி என்ற பெயரை கொண்ட அந்தப் பெண், வட சென்னை மாவட்ட விஜய் சேதுபதி நற்பணி மன்றத்தின் மகளிரணி தலைவி ஆவார். விஜய் சேதுபதியை மாமா மாமா என்று கூறி வரும் அவர், ஐ லவ் யூ மாமா, உங்களை ரொம்ப மிஸ் பண்றேன், இந்த ஜென்மத்துல கிடைக்கல அடுத்த ஜென்மத்துல நான்தான் என கண்கள் கலங்க உருக்கமாக பேசியுள்ளார்.

மாமான்னா வெறி

மேலும் விஜய் சேதுபதியின் உருவத்தையும் தனது கையில் பச்சைக் குத்தியுள்ள தேவி, தனது பெயருக்கு பின்னால் சேதுபதி என்றும் சேர்த்துள்ளார். மாமா என்றால் எனக்கு வெறி, அவர்தான் என் உயிர் என்றும் உருக்கமாக பேசியுள்ள தேவி, மக்கள் செல்வனை தங்களுக்கு தந்த அவரது பெற்றோருக்கும் அவரது மனைவிக்கும் நன்றி தெரிவித்துள்ள தேவி, விஜய் சேதுபதிக்கு என்றும் கண்மணியாக இருக்கவே ஆசைப்படுவதாக கூறி உணர்ச்சிவசப்பட்டுள்ளார் தேவி சேதுபதி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்