ஆப்நகரம்

க/பெ ரணசிங்கம் OTT ரிலீஸ் தேதி இதோ! ரசிகர்கள் கொண்டாட்டம்

க/பெ ரணசிங்கம் படம் அக்டோபர் 2ம் தேதி நேரடியாக OTT தளத்தில் வெளியாக உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Samayam Tamil 15 Sep 2020, 7:05 pm
விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் படம் க/பெ ரணசிங்கம். இந்த படத்தின் டீசர் பல மாதங்களுக்கு முன்பே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் சூழலில் தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் இந்த பாடம் வெளியாகாமல் இருந்தது.
Samayam Tamil Ka pae Ranasingam


இந்நிலையில் க/பெ ரணசிங்கம் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர் என ஒரு வாரத்திற்கு முன்பே செய்தி வந்தது குறிப்பிடத்தக்கது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் தயாரிப்பாளர் கேஜேஆர் நிறுவனம் ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். அதன் படி இந்த படம் ஜீ ப்ளக்ஸ் தளத்தில் pay per view அடிப்படையில் வெளியாக உள்ளது. ஆனால் இப்போது வரை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று மாலை கேஜேஆர் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் க/பெ ரணசிங்கம் படம் அக்டோபர் 2ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என அறிவித்து இருக்கின்றனர். தொடர்ந்து பல மாதங்களாக புது படங்கள் பார்க்காமல் இருக்கும் ரசிகர்கள் தற்போது இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.


இந்த படத்தில் விஜய் சேதுபதி சமுதாயத்தில் அரசியலில் இருப்பவர்கள் செய்யும் மோசடிகளை எதிர்த்து போராடும் ஒரு போராளியாக நடித்துள்ளார்.

க/பெ ரணசிங்கம் படத்தின் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் முக்கியமானதாக இருந்தாலும் அதில் அவர் குறைந்த அளவு நேரம் மட்டுமே வருவார் என்றும், மீதி படம் முழுவதும் அவரது மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்தினை சுற்றி தான் இருக்கும் என கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி போராளியாக நடித்து இருப்பதால் அவரது வசனங்கள் தீப்பொறி பறக்கும் வகையில் இருக்கும் எனதெரிகிறது. அது படத்தின் டீசேரிலேயே காட்டப்பட்டு இருந்தது.

"சாதி மத, அரசியலை தாண்டி இன்னைக்கு தண்ணீர், காற்றை வைத்து தான் இன்று மொத்த உலக அரசியல் நடக்கிறது"

"இது புறம்போக்கு இடம்.. அதை எப்படி பட்டா போட்டீங்க, 2000 பேருக்கு வேலை கொடுத்துவிட்டு விவசாயம் பண்ணிட்டு இருந்த 50 ஆயிரம் பேரை தெருவில் நிப்பாட்டினா எப்படி சார்."

"நம்ம ஊரு பொம்பளைங்க தண்ணி வண்டி தள்ளிட்டு இருங்காங்க, அந்த (சோலார்) கரெண்ட் கம்பெனி காரன் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணி எடுக்கிறான் பிலேட் கழுவ. பார்த்துட்டு சும்மா இருக்க சொல்ரியா?" என விஜய் சேதுபதியின் பல வசனங்கள் கவனம் ஈர்க்கும் வகையில் இருந்தன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்