ஆப்நகரம்

தடையை மீறப் போகும் விஜய் சேதுபதி?!

தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடையை மீறி தனது ‘ஜுங்கா’ படத்தை தொடங்க முடிவு செய்துள்ளார்.

Samayam Tamil 22 Mar 2018, 6:01 pm
தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடையை மீறி தனது ‘ஜுங்கா’ படத்தை தொடங்க முடிவு செய்துள்ளார்.
Samayam Tamil junga


தற்போது தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு காரணங்களுக்காக ஸ்டிரைக் நடத்திவருகிறது. இந்த மாத துவக்கத்திலிருந்து எந்த புதிய படமும் வெளியாகவில்லை. மேலும் இம்மாதம் 16ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடந்து வரும் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. ஆனால் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்திற்கும், மற்ற 3 சிறிய பட்ஜெட் படங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இது கோலிவுட்டில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு சிலர் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படி பாரபட்சமாக சங்கம் நடந்துகொள்வதால் கடும் அதிருப்தியில் இருந்த நடிகர் விஜய் சேதுபதி ‘ஜூங்கா’ படப்பிடிப்பை மீண்டும் துவங்கும்படி படக்குழுவிடம் கூறியுள்ளார். அதனால் விஜய் சேதுபதி, சயீஷா உட்பட படக்குழு தற்போது போர்சுக்கல் நாட்டுக்க சென்றுள்ளது. அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கம் தடையை மீறி விஜய் சேதுபதி இப்படி செய்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்