ஆப்நகரம்

தன் மருமகனை ஹீரோவாக்கப் போகும் விஜய் மாமா?

மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ தன் மருமகன் ஆகாஷ் முரளியை தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

Samayam Tamil 2 Feb 2021, 9:28 am
சேவியர் பிரிட்டோ தன் மருமகன் ஆகாஷை வைத்து படம் தயாரிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.
Samayam Tamil vijay starrer master producer xavier britto to launch son in law akash
தன் மருமகனை ஹீரோவாக்கப் போகும் விஜய் மாமா?


மாஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் படம் கடந்த 13ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மாஸ்டர் படம் உலக அளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தை விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ தான் தனது எக்ஸ்.பி. கிரியேட்டர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார். இந்நிலையில் அவர் மேலும் பல படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளாராம்.

மருமகன்

தன் மருமகன் ஆகாஷ் முரளியை ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறாராம் சேவியர் பிரிட்டோ. அதர்வாவின் தம்பியான ஆகாஷும், சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவும் படிக்கும் காலத்தில் காதலித்தனர். வெவ்வேறு மதம் என்பதால் அவர்களின் காதலுக்கு முதலில் எதிர்ப்பு கிளம்பியது. அதன் பிறகு ஆகாஷும், சினேகாவும் தங்கள் காதலில் உறுதியாக இருந்ததை பார்த்து திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்கள்.

திருமணம்

சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆகாஷ், சினேகாவின் திருமணம் சென்னையில் நடந்தது. கொரோனா வைரஸ் பிரச்சனை நேரம் என்பதால் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.ஆகாஷுக்கு திருமணம் நடந்தபோதே அவர் விரைவில் கோலிவுட்டில் அறிமுகமாகக்கூடும் என்று கூறப்பட்டது.

அதர்வா

ஆகாஷை அவரின் அண்ணன் அதர்வா அறிமுகம் செய்து வைப்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த பொறுப்பை மாமனார் ஏற்றுக் கொண்டிருக்கிறாராம். ஆகாஷின் முதல் படத்தை இயக்கப் போவது யார், அதில் யார், யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆகாஷ் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முரளியின் வீட்டில் இருந்து இன்னொரு ஹீரோ வரவிருக்கிறார். என்ன இதை எல்லாம் பார்த்து சந்தோஷப்பட முரளி உயிருடன் இல்லையே என்பது தான் அவருக்கு நெருக்கமானவர்களின் கவலை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்