Thalapathy 67: கே.ஜி.எஃப் வில்லன், ஹேன்ட்சம் வில்லன், இப்போ இவர் வேறயா?: விஜய் பாவம்
தளபதி 67 படத்தில் ஆறு வில்லன்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய்க்கு வில்லனாக ஒரு மாஸ் நடிகர் நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil 14 Aug 2022, 2:59 pm
ஹைலைட்ஸ்:
- லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67
- தளபதி 67 படத்தில் 6 வில்லன்கள்
வம்சி பைடிபல்லி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். அந்த பட வேலையை முடித்துக் கொண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். தற்போதைக்கு தளபதி 67 என்று அழைக்கப்படும் அந்த படம் மும்பையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறதாம். தளபதி 67 படத்தில் ஆறு வில்லன்கள் இருப்பதாக பேச்சு கிளம்பியிருக்கிறது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மலையாள நடிகர் ப்ரித்விராஜ், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் வில்லன்களாக நடிக்கப் போகிறார்களாம். இந்நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் தளபதிக்கு வில்லனாகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆறு வில்லன்களில் மூன்று பேர் வெயிட்டான பார்ட்டிகளாக இருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் படத்தில் வில்லன்கள் தான் எளிதில் ஸ்கோர் செய்துவிடுவார்கள். இந்நிலையில் ஆறு பேர் இருந்தால் விஜய்ணா என்ன செய்வார் என்கிறார்கள் ரசிகர்கள்.
அர்ஜுன் எல்லாம் ஈஸியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுவாரே. முன்னதாக விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி எனும் ஒரு வில்லன் இருந்தே முடியவில்லை. இதில் ஆறு பேரா என்பதே ரசிகர்களின் கவலை ஆகும்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மலையாள நடிகர் ப்ரித்விராஜ், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் வில்லன்களாக நடிக்கப் போகிறார்களாம். இந்நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுனும் தளபதிக்கு வில்லனாகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆறு வில்லன்களில் மூன்று பேர் வெயிட்டான பார்ட்டிகளாக இருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் படத்தில் வில்லன்கள் தான் எளிதில் ஸ்கோர் செய்துவிடுவார்கள். இந்நிலையில் ஆறு பேர் இருந்தால் விஜய்ணா என்ன செய்வார் என்கிறார்கள் ரசிகர்கள்.
அர்ஜுன் எல்லாம் ஈஸியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுவாரே. முன்னதாக விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி எனும் ஒரு வில்லன் இருந்தே முடியவில்லை. இதில் ஆறு பேரா என்பதே ரசிகர்களின் கவலை ஆகும்.