விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். விஜய் ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து மாளவிகா நடிக்கப்போகும் மற்றொரு படத்தைப் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மாளவிகா தனது அடுத்த படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம்.
கார்த்தி தற்போது, பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் அலாவுதீன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குநர் பி எஸ் மித்ரன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதே நேரம் மணிரத்னம் படத்தில் வாய்ப்பு வந்ததால், கார்த்தி இந்த படத்தை கிடப்பில் வைத்துள்ளதாக தெரிகிறது.
மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. கார்த்தி தான் படம் முழுக்க வருகிறார் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தை முடித்துக் கொண்டு மித்ரன் படத்தில் நடிப்பாரா, அல்லது இடைவெளிகளில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் முடிப்பாரா என்பது தெரியவில்லை. எனினும் ஏப்ரல் மாதம் பி எஸ் மித்ரனின் படம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில்தான் கார்த்தி ஜோடியாக நடிக்க மாளவிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அவரை கமிட் செய்துவிட்டு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட காத்திருக்கிறாராம் பி எஸ் மித்ரன்.
இந்நிலையில், மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து மாளவிகா நடிக்கப்போகும் மற்றொரு படத்தைப் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மாளவிகா தனது அடுத்த படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம்.
கார்த்தி தற்போது, பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் அலாவுதீன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குநர் பி எஸ் மித்ரன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதே நேரம் மணிரத்னம் படத்தில் வாய்ப்பு வந்ததால், கார்த்தி இந்த படத்தை கிடப்பில் வைத்துள்ளதாக தெரிகிறது.
மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. கார்த்தி தான் படம் முழுக்க வருகிறார் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தை முடித்துக் கொண்டு மித்ரன் படத்தில் நடிப்பாரா, அல்லது இடைவெளிகளில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் முடிப்பாரா என்பது தெரியவில்லை. எனினும் ஏப்ரல் மாதம் பி எஸ் மித்ரனின் படம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில்தான் கார்த்தி ஜோடியாக நடிக்க மாளவிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். அவரை கமிட் செய்துவிட்டு முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட காத்திருக்கிறாராம் பி எஸ் மித்ரன்.