ஆப்நகரம்

வடிவேலுவுக்காக எழுதிய கதையில் விஜய்!

இயக்குனர் எழில், வடிவேலுவுக்காக எழுதிய ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் கதையில் நடிகர் விஜய் நடித்துள்ளார்.

Samayam Tamil 29 Jan 2018, 3:20 pm
இயக்குனர் எழில், வடிவேலுவுக்காக எழுதிய ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் கதையில் நடிகர் விஜய் நடித்துள்ளார்.
Samayam Tamil vijay thulladha manamum thullum was vadivel rejected movie
வடிவேலுவுக்காக எழுதிய கதையில் விஜய்!


விஜய் நடித்த காதல் படங்களில் மெகா ஹிட் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. இப்படத்தில் விஜய்-, சிம்ரன் ஜோடியாக நடித்துள்ளனர். படத்தில் பாடல்கள், கதை என அம்சமாக அனைத்தும் பொருந்தியிருந்தது. இப்படம் குறித்த சில விஷயத்தை இயக்குனர் எழில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இப்படத்திற்கு முதலில் வடிவேலுவை நினைத்து தான் கதை எழுதினேன். வடிவேலுக்கு கதை மிகவும் பிடித்துபோனது. அவர் நடிப்பதாக கூறினார். தயாரிப்பாளர்களை தேடினோம். யாரும் முன்வரவில்லை. பின்னர் கதையை நடிகர் முரளிக்காக கொஞ்சம் மாற்றினேன். முரளிக்கும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. பின்னர் இந்தக் கதையை விஜய்யிடம் கூறினேன். அவர் கதைகேட்டுவிட்டு அடுத்த நாளே எனக்கு கதை ஓகே, சூப்பர். இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன் என்றார். விஜய் நடிக்கிறார் என்றதும் கதையில் ஆக்ஷன் காட்சிகள், பாடல்கள் என கமர்ஷியலாக சில மாற்றங்கள் செய்தோம்’’ என்றார் இயக்குனர் எழில்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்