ஆப்நகரம்

இதனால் தான் அஜித் பேட்டியே தருவதில்லையாம்! ஏன் தெரியுமா?

நடிகர் அஜித், மீடியாக்களுக்கு எப்போதுமே ஏன் பேட்டி கொடுப்பதில்லை என்ற ரகசியத்தை தற்போது கூறியுள்ளார் ‘நீயா நானா’ நிகழ்ச்சி கோபிநாத்.

Samayam Tamil 6 Apr 2019, 7:14 pm
நடிகர் அஜித் கோலிவுட் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். தற்போது இவர் ‘நேர்கொண்டா பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளது.
Samayam Tamil Ajith


இந்நிலையில் அஜித் ஒரு போதும் மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பதையே விரும்பியது இல்லை, அவரை தொலைக்காட்சி பேட்டிகளில் பார்ப்பது மிக அரிது. அதற்கு காரணம் என்ன என்பதை கோபிநாத், நடிகர் அஜித்திடம் கேட்டு விட்டாராம்.

அதற்கு அஜித் கூறிய பதில் ‘‘சார் நான் ஆரம்பத்தில் தமிழை தவறாக உச்சரித்து வந்தேன். அப்போது பலரும் ஒரு மாதிரி பேசினார்கள். சரி எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசலாம் என்று பேசினேன். அதையும் சிலர். ஒரு தமிழ் நடிகன் ஆங்கிலத்தில் பேசலாமா? என்று அதற்கும் திட்டினார்கள். இனி பேசவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன். அஜித் என்ன அவ்வளவு பெரிய ஆளா, பேசமாட்டாரா? என்று கூறினார்கள், என்ன செய்வது என்றே தெரியாமல் தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்’’ என்றாராம் அஜித்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்